






Published on 26/09/2023 | Edited on 26/09/2023
ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு விழாவில் ஒன்றிய அரசின் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு விழாவில் ஒன்றிய அரசின் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
Next Story
நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; அது பகல் வேஷம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “1967 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்து வந்தது. அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சிதான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. திமுக வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தவறான, தேவையற்ற பிரச்சாரங்களையும், பொய் செய்திகளையும் பரப்பி வருகின்றனர். அண்ணாமலை குழப்பினாலும் கவலைப்படமாட்டேன். ஆனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தி உள்ளவர்கள் திமுக அரசை பாராட்டுவார்கள். நிர்மலா சீதாரமனுக்கு உண்மையிலேயே பக்தி இருந்திருந்தால் திமுக ஆட்சியை பாராட்டி இருக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு இருப்பது பக்தி இல்லை; அது பகல் வேஷம். நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற பகல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்” எனப் பேசினார்.
Next Story
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (07.10.2023) 52வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது. அதன்படி சிறுதானிய மாவு உணவு தயாரிப்புக்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதால் சத்தான உணவுப் பொருட்கள் மக்களைச் சென்றடையும். சத்தான உணவுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் கவனம் திரும்ப இந்த வரி குறைப்பு உதவும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் இந்தக் கூட்டத்தின் போது, மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உயிர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது. உயிர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மேலும் சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரையை தமிழகம் ஏற்றுக்கொள்கிறது. சிறுதானிய பொருள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் முடிவை ஏற்கிறோம்” எனத் தெரிவித்தார்.