Skip to main content

மத்திய பட்ஜெட்டால் விரக்தி; ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

Published on 12/02/2021 | Edited on 13/02/2021

 

UNION BUDGET SALEM DISTRICT AUTO DRIVER INCIDENT POLICE INVESTIGATION

 

மத்திய அரசு பட்ஜெட்டில், '15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படும்' என அறிவிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த சேலத்தைச் சேர்ந்த ஏழை ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

 

சேலம் பொன்னம்மாபேட்டை செங்கலணை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (59). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டிவந்த சரவணன், அண்மையில் ஒரு பழைய ஆட்டோவை வாங்கி சர்வீஸ் செய்து, ஓட்டி வந்தார்.

 

கடந்த 1- ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சுற்றுச்சூழல் நலன் கருதி 15 ஆண்டுக்கு மேலான வாகனங்கள் காலாவதி ஆனதாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. பலரிடம் கடன் பெற்று பழைய ஆட்டோவை வாங்கி ஓட்டிவந்த நிலையில், அரசின் இந்த திடீர் அறிவிப்பால் தான் எப்படிக் கடனை அடைப்பேன் என குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் புலம்பி வந்தார். 

 

இனி நான் எப்படிக் குடும்பம் நடத்துவேன் என புலம்பியபடி கடும் விரக்தியில் இருந்த சரவணன், பிப். 3- ஆம் தேதி தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் குடித்துவிட்டார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (பிப். 12) அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முன்பாக சரவணன், தான் வைத்திருந்த நோட்டு புத்தகத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ''போதிய வருமானம் இல்லாததாலும் கடன்சுமை காரணமாகவும் 15 ஆண்டு வண்டிகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டதாலும் தற்கொலை செய்துகொள்கிறேன். இந்த முடிவுக்கு நானே காரணம். என் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள்'' என எழுதி வைத்துள்ளார்.

 

இந்த கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதுபற்றியும் விசாரித்து வருகின்றனர். 15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படும் எனும் மத்திய அரசின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.