Skip to main content

நகையைப் பறிகொடுத்த முதியவர்! நூதன மோசடி...

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Unidentified persons cheated old man
                                                       மாதிரி படம்


சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 80 முதியவர் நடராஜன். இவர் திண்டிவனம் அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புவதற்காக திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ்ஸுக்காக நேற்று காத்திருந்தார். அப்போது, அவரிடம் 2 மர்ம நபர்கள் நெருங்கி நின்று, நயமான முறையில் பேச்சு கொடுத்துள்ளனர். 


அந்த 2 மர்ம நபர்களும் தங்க நிற முலாம் பூசப்பட்டு அதில் கற்கள் பதித்த போலி நகையைக் காட்டி, இந்த நகை ரூ.40 லட்சம் மதிப்புள்ளது. இந்த நகை இங்கே யாரும் வாங்க மாட்டார்கள். தற்போதைக்கு, இந்த 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை நீங்கள் வைத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக நீங்கள் அணிந்திருக்கும் நகையைக் கழற்றிக் கொடுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் நகை சில ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கும்  இந்த நகையை 40 லட்சம் ரூபாய் மதிப்பிலானது. நீங்கள் சென்னை சென்று இதை நகைக்கடையில் விற்று பணமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம் எனப் பலவிதமான ஆசை வார்த்தைகளைக் கூறி பெரியவரை  மயங்க வைத்துள்ளனர். 
 

அவர்களின் பேச்சை நம்பி முதியவர் நடராஜன், தன் கையில் அணிந்திருந்த 6 பவுன் கைகாப்பு, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை மர்ம நபர்களிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு, அவர்கள் வைத்திருந்த கற்கள் பதித்த போலி நகையை வாங்கியுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மாயமாகி விட்டனர். பெரியவர் நடராஜன், மனதில் சந்தேகம் தோன்றவே அங்கிருந்த ஒரு நகைக்கடையில் கொண்டுசென்று, அதைக் காட்டி இது உண்மையா என்று கேட்டுள்ளார். அவர்கள் அதைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, இது போலி நகை என்று கூறி உள்ளனர். 
 

அப்போதான் நடராஜனுக்கு அந்த மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது.  இதையடுத்து நடராஜன், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து,  போலி நகை கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

 

cnc

 

வயதானவர்களிடம் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றும் கும்பல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது  என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.