Skip to main content

கள்ளத் துப்பாக்கி - 6 பேர் கைது

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் எல்லையில் அமைந்துள்ள அரசுக்கு  சொந்தமான காப்பு காடுகளில் அரிய வகை வனஉயிரினங்களான மான்கள், காட்டுப்பண்றிகள், முயல்கள் மற்றும் தேசிய பறவையான மயில்கள் என உள்ளிட்ட வன விலங்குகளை சமூக விரோதிகள் கள்ள துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடி அழித்து வருகின்றனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

Ulundurpet



எஸ்பிஜெயசந்திரன் உத்தரவின்படி  உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் மதுரை வீரன், இளந்திரையன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டைதாரர்களை பிடிக்கும் பொருட்டு தேடிவந்தனர்.


 

 

இந்த நிலையில் 14.12.2019 ம் தேதிஎறையூர் TO அதையூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கோயில் அருகே இரவு நேரத்தில் கையில் கள்ள நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்த எறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிபுஷ்பராஜ், அந்தோணிசாமி, ஜோசப்ராஜ், லியோபிரகாஷ், ஜான்ரொசரியோ ஆகியோர்களை கைது செய்தும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் அழைத்து வந்து டிஎஸ்பி விஜயகுமார் அவர்கள்  விசாரணை செய்தார். 

 


போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட நபர்களுக்கு கள்ளத்துப்பாக்கி செய்து விற்பனை செய்த சின்னசேலம் வட்டம்நாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்று தெரிந்தவுடன்  துரைசாமியை கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 8 கள்ள நாட்டு துப்பாக்கிகளையும், போலி துப்பாக்கி செய்ய பயன்படுத்தும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

 

 

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.