Skip to main content

காவிரியில் குளிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை... தேடும் பணி தீவிரம்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

Cauvery

 

திருச்சி அருகே காவிரியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அந்தப் பகுதியில் உள்ள தியான மையத்தில் தோட்ட தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்டான்லி (வயது 37), டேவிட் (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

 

இதில் ஸ்டான்லி திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மின்ஊழியராகப் பணியாற்றி வந்தார். டேவிட் காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். ஸ்டான்லி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மேனகா அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோயல் (9) என்ற மகன் உள்ளார். நடேசனின் 2 மகன்களும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தந்தை நடேசன் வேலை பார்க்கும் தியான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கியிருந்தனர்.

 

இந்த நிலையில் 03.08.2020 மதியம் ஜோயல், தனது சித்தப்பாவான டேவிட்டுடன் தியான நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் செல்வதாகச் சென்றனர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் அவர்களைத் தேடி காவிரி ஆற்றுக்கு வந்தார். அப்போது, காவிரி கரையில் அவர்கள் கொண்டுவந்த துண்டு, சோப்பு டப்பா கரையில் இருந்தது. ஆனால் இருவரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அப்பகுதி மக்களின் உதவியுடன் மகனையும், பேரனையும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

 

இது குறித்து திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நீண்டநேரம் தேடினர். அதன்பின்னும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இரவு நேரமானதால், தேடமுடியவில்லை. மேலும் அவர்களது கதி என்ன என்றே தெரியவில்லை. இன்று மீண்டும் தேடுவதாகத் தீயணைப்பு வீரர்கள் கூறிச் சென்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சித்தப்பாவும், சிறுவனும் காவிரி ஆற்றுக்குள் காணாமல் போனதால், அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மாயமான ஜோயல் 3 -ஆம் வகுப்பு படித்து வந்தார். தொடர்ந்து 2 -ஆவது நாளாக சித்தப்பா மற்றும் அண்ணன் மகனை தேடும் பணி நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.