Skip to main content

சேலத்தில் இரண்டு திருடர்கள் குண்டாஸில் கைது!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Two arrested under gondas act in salem

 

சேலத்தில், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான கொட்டையன் மற்றும் மொட்டையன் ஆகிய இருவரையும் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். 


சேலத்தை அடுத்த நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், உத்தமசோழபுரம் அருகே, கடந்த ஏப்ரல் 24ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், சுபாஷை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எஸ்.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கொட்டையன் என்கிற சதீஸ் என்கிற பிரபாகரன் (30) என்பவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

Two arrested under gondas act in salem

 

இதையடுத்து, சம்பவம் நடந்த அன்றே அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2019ம் ஆண்டு தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை தாக்கி கொலை செய்த முயற்சித்த வழக்கும், 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரம் என்பவரை கத்தியால் வெட்டிய வழக்கும் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 


அதேபோல், சின்ன கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி, நெய்க்காரப்பட்டி அருகே நடந்து சென்றபோது, அவரை கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த மணி மகன் மொட்டையன் என்கிற பிரபு (32) கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சம்பவம் நடந்த அன்றே மொட்டையனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், அவர் மீதும் ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. 


தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் கொட்டையன், மொட்டையன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை (மே 19) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 


சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களிடம், குண்டர் சட்ட கைது ஆணையை காவல்துறையினர் சார்வு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.