Skip to main content

இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் இடையே சலசலப்பு

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

A tussle between EPS and OPS team members

 

இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் இடையே தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் அமைந்துள்ள வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10.15 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த வகையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வந்தனர். அப்போது பெரியார் சிலைக்கு கீழே பெரியார் உருவப்படத்தை வைத்து ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கோகுல இந்திரா உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் எனக் கூறி, சிலையின் மற்றொரு புறத்தில் இன்னொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பினர் வைத்த படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு கூடியிருந்த இரு தரப்பு தொண்டர்களிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சபாநாயகர் அப்பாவு சொன்ன குற்றச்சாட்டுக்கு இ.பி.எஸ். பதில்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

EPS's response to Speaker Appa's allegations

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்களைக் கொண்டு பேசுகிறார்கள்” எனவும், தனக்கு மூன்று முறை ஒருவர் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் தெரிவித்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால்தான் நாம் பேச முடியும். சபாநாயகர் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஜனநாயகப்படியும், அவையின் மரபையும் கடைப்பிடிக்கிறாரா? எனவே அவர் சொல்லி இருப்பது சரியா தவறா என நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். சட்டப்பேரவை தலைவர் என்பவர் பொதுவானவர். ஆனால், அவர் ஒரு கட்சிக்காரர் போல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலா... நீங்க சொல்லித்தான் தெரியும்” - இ.பி.எஸ்.

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Edappadi palanisamay addressed press in salem

 

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகள், தலைமைச் செயலகம், துறைமுகம் எனச் சென்னையின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் இருக்கும் இடத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியமா. கார் பந்தயம் நடத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் மைதானம் இருக்கிறது; அங்கு நடத்தலாம். இந்த கார் பந்தயம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது வெறும் விளம்பர அரசு. இந்த கார் பந்தயத்தால் ஏழை மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகக் கூறி அமலாக்கத்துறை அரசு மருத்துவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததா இல்லையா என்பது குறித்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். எங்கே தவறு நடந்தாலும், அது தவறுதான். எனவே அதில் சட்டம் அதன் கடமையை செய்வதில் எந்த தவறுமில்லை” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து ‘ஆளுநர் விவகாரத்தில் முதல்வரை அழைத்து பேசவேண்டும் என உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளதே’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், “அதுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டதே. பிறகு நாம் என்ன சொல்றது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்