சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று (06/11/2021) காலை 11.00 மணிக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில், வரவிருக்கின்ற நகராட்சி, மாநகராட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.