Skip to main content

திருட்டை கண்டுபிடிக்க வந்த முக்காலி... ஆச்சர்யத்துடன் குவிந்த கிராம மக்கள்!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

The tripod that came to find the theft... the villagers gathered!

 

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள சன்னாசியார் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட பல மாவட்டங்களிலும் இந்த சன்னாசியாரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். பொதுமக்களின் பங்களிப்புடன் வனப்பகுதியில் உள்ள சன்னாசியார் கோவில் மரங்களுக்கு சேதமின்றி திருப்பணிகள் முடிந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

 

குடமுழுக்கு நடந்த சிலநாட்களில் கோவில் உள்ளே இருந்த இரும்பு உண்டியல் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்கள் காணிக்கையாக போட்ட பணம் காணாமல் போயிருந்தது. 2 பூட்டுகளும் அதிக சேதாரமின்றி உடைந்து கிடந்தது. பணத்தை திருடியவர்கள் கொண்டு வந்து போடுவார்கள் என்று கோவில் நிர்வாகிகளும் அந்தப்பகுதி மக்களும் காத்திருந்தனர். ஆனால் திருட்டு போன உண்டியல் பணம் வரவில்லை. 48 நாட்கள் மண்டலாபிஷேகம் வரை காத்திருந்தும் பணம் திரும்ப வரவில்லை என்பதால் கோவில் நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் இணைந்து உண்டியல் உடைத்து திருடியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

 

The tripod that came to find the theft... the villagers gathered!

 

அந்த முடிவின்படி சிட்டங்காடு பூசாரி நடராஜன் மூலம் முக்காலியை கொண்டு வந்து திருட்டைக் கண்டுபிடிக்க முடிவெடுத்து புதிய முக்காலி வாகை மரத்தில் கொத்தமங்கலம் தச்சர் மூலம் தயாரானது. வெள்ளிக்கிழமை முக்காலி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைத்து இரவு பூஜைகள் செய்யப்பட்டது.சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டது. இதனைக் காண பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.

 

இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது,இந்த உண்டியல் திருடியவர்களை முக்காலி காட்டிக் கொடுக்கும் என்று நம்புவதாக கூறினார்கள். முக்காலி இயக்கும் பூசாரி சிட்டங்காடு நடராஜன் நம்மிடம் பேசுகையில், 'இதுவரை ஏராளமான திருட்டுகளை கண்டுபிடித்து இருக்கிறோம். ராணுவ வீரர்களுக்கு சம்பளம் போட வைத்திருந்த பணம் திருடு போனதைக் கூட நான் இயக்கிய முக்காலி தான் கண்டுபிடித்தது. போலீஸ் வீட்ல திருடியதை கண்டுபிடிச்சு கொடுத்தேன். அதேபோல உண்டியல் திருட்டையும் கண்டுபிடிக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.