Skip to main content

"சொல்லும் வேலையை செய்யவில்லை" - தொழிலாளி அடித்து கொலை

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

trichy worker case police arrested senthil
  செந்தில்
​​​​​

 

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே விடுதலைபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். கல்லக்குடி அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தில் உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான (39) பண்ணைத் தோட்டத்தில் முருகேசன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் வேலைக்கு சென்ற முருகேசனை தோட்ட உரிமையாளர் செந்தில் மற்றும் தனபால் ஆகிய இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவரது மனைவி சகுந்தலாவிடம் கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் முருகேசனை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சென்ற அரை மணிநேரத்தில் முருகேசன் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

 

இதனையடுத்து அவரது உடலை பார்த்தபோது, பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இது குறித்து கல்லக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சகுந்தலா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்திலை தேடி வந்தனர். சிறுகனூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த செந்திலை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் செந்திலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் நான் சொல்லும் வேலைகளை ஒழுங்காக செய்யாததால் கோபத்தில் கட்டையால் அடித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செந்தில் லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.