Skip to main content

சிக்கலில் திருச்சி ஸ்ரீ சத்குரு ராஜயோக திருமடம்

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் அகத்திய பரம்பரையில் ஒன்பதாவது முனிவராக தோன்றியவர். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நடுவப்பட்டி யில் பிறந்தவர். அஷ்டாங்க யோகங்களில் சித்தி பெற்று 10 இடங்களில் பூமிக்குள் 48 நாட்கள் இருந்து தவம் இயற்றி உள்ளார்.

 

பொதிகை மலை, பழனி மலை, சுருளிமலை, வெள்ளியங்கிரி, நீலகிரி முதலிய மலைப்பகுதிகளில் கடும் தவம் புரிந்தவர் . இவர் பூமிக்குள் தவமியற்றிய இடங்களில் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமடம் ஆகும்.

 

jdr (995)

 

இத்திருமடம் நடுவில் எண்கோண வடிவில் பத்தடி ஆழம் கொண்ட உள்ள குகை உண்டு.

 

104 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சற்குரு நாத மகா முனிவர் இக்குகையில் அமர்ந்து மூடு பாறையினால் மூடி 48 நாட்கள் நிர்விகல்ப சமாதி தவமியற்றி எழுந்தருளியுள்ளார்.

 

இத்தகைய தவ வலிமை உடைய ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் திருமடத்தின் முன்பு முழுமுதற் கடவுளாகிய அருள்மிகு சித்தி விநாயகர் பெருமானை எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

 

திருமடம் ஆனது ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரால் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே இடமாகும். ஸ்ரீ சற்குரு நாத அஷ்டாங்க யோகத்தின் மூலம் அஷ்டமாசித்தி பெற்றிருந்தும் சித்துக்களை கற்பனையே என்று கூறியுள்ளார்.

 

thiruchy

 

பக்தர்களுக்கு பக்தியே சிறந்தது என்றும் பக்தியின் மூலமே அத்வைத நிலையை அடைய முடியும் எனவும் உபதேசித்து உள்ளார்கள்.

 

சைவ வழி நெறி நின்று சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய படிகளில் சாதனை புரிய உபதேசித்து உள்ளார்கள். இவர் ஜாதி ,மத, மொழி, இன வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் கொள்கை கொண்டவர்.

 

திருவானைக்கோவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். அதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி திங்கள் திருவோண நட்சத்திரத்தில் மகா குருபூஜை முதல் நாள் ஸ்ரீ சற்குரு நாதர் மலர் அலங்காரத்துடன் திருவானைக்காவில் கோவிலைச் சுற்றி திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

 

thiruchy

 

ஏழை மக்களிடத்தில் மிகுந்த கருணை கொண்டிருந்தார் .1913 ஆம் ஆண்டிலேயே குருபூசை விழாக்களை நடத்தி சமபந்தி விருந்து உண்ண செய்துள்ளார்கள்.

 

அதைத் தொடர்ந்து பக்தர்களால் ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

ஸ்ரீ சற்குரு நாதர் சிலகாலம் திருவானைக்காவலில் உள்ள திருமடத்தில் இருந்துவிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு எழுந்தருளி பவானி ஆறு உற்பத்தியாகும் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாது ஏழு நாள் இரவு பகல் தவமியற்றி பிறகு திருக்காந்தல் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மடத்திற்குச் சென்று மகா சீடராகிய ஏகாம்பரர் சுவாமிகளை சந்தித்து விட்டு உதகை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சிலகாலம் தங்கியிருந்தார்.

 

அப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கும் நகர மக்களுக்கும் சாதி, சமய ,மொழி, இன வேறுபாடின்றி சமபந்தி விருந்து அளித்து வருவதுடன் ஆச்சாரங்களை போதித்து கல்வியறிவை கற்பிக்கவும் செய்து குரு உபதேசம் பெற்று பக்தி கர்ம யோக ஞான சாதனைகளை செய்து பிறவிப்பயன் அடைய உபதேசம் செய்துள்ளார்கள்.

 

thiruchy

 

பிறகு தன் பிரதான சீடர்களுடன் அகஸ்திய தவம் புரிந்த பொதிகை மலை சென்று அவன் திரும்பி வருவான் என்று சொல்லி தனது திருமேனியோடு அந்தரத் தியானமாய் மறைந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

 

அந்நாளிலிருந்து திருச்சியில் சாதுக்களும், யோக சாதகர்களும், பொதுமக்களும் ஸ்ரீ சத்குரு ராஜயோக திருமடத்திற்கு வந்து வணங்கி தியானம் செய்து வருவது காலம்தொட்டே நடந்து வருகிறது.

 

திருமட இடமானது சத்குரு பெயரிலேயே பதிவாகி உள்ளது. மடத்தில் சற்குரு படம் வைத்து தீப விளக்கேற்றி பராமரித்து வந்தவர் ரத்த சம்பந்த உறவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட சர்ச்சையினால் இரண்டு அறக்கட்டளை உருவானது.

 

ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை பதிவு எண் 196/BK4/2010, தலைவராக மாணிக்கம், செயலளராக அய்யாசாமி, துணை செயலாளர்கள் மருதமுத்து, கருணாகரன், பொருளாளர்கள் செல்வகுமார், அறக்கட்டளை உறுப்பினர் இளஞ்செழியன், பரமேஸ்வரன், சுரேஷ் குமார், குமார் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளார்கள்.இவர்கள் சித்திரை திருவோண நட்சத்திரத்தில் குருபூசை விழா நடத்துவார்கள்

 

ஸ்ரீ சற்குரு சுவாமி ராஜயோக திருமட அறக்கட்டளை பதிவு எண் 497/ BK4/2010 தலைவராக சாமி ஐயா, துணைத் தலைவராக நாகராஜன், செயலராக தினேஷ்குமார், துணைச் செயலராக ராஜமாணிக்கம், பொருளாளராக ராஜகோபால் துணைப் பொருளாளராக சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உள்ளார்கள். இவர்கள் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் குருபூசை விழா நடத்துவார்கள்.

 

மடத்தினுள் சித்தி விநாயகர் திருக்கோவில் மடப்பள்ளி சற்குரு நாதர் தியான மண்டபம் அமைந்துள்ளது. மடத்திற்குள்ளேயே இரண்டு அறக்கட்டளைக்கான அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

 

இவ்வாண்டு குன்னூர், ஊட்டி, வெள்ளனூர், லால்குடி, நாக நல்லூர், அம்மம்பாளையம், துறையூர், கோயம்புத்தூர் ,மதுரை, தேனி, ஆத்தூர், தர்மபுரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்ட சற்குரு பக்தர்கள் திருமடத்திற்கு வந்து குருபூசை திருவிழாவில் பங்கேற்றார்கள்.

 

thiruchy

ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை 

 

(பதிவு எண் 196/ BK/4/2010) ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்கம் திருச்சி, கிளை ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்க அறக்கட்டளை குன்னூர், தமிழ்நாடு ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்கங்கள் மற்றும் ஆசிரம கூட்டமைப்பு இணைந்து சித்திரை திங்கள் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீ சற்குரு நாதர் 104 ஆம் ஆண்டு குரு பூஜை திருவிழாவினை 26- 4- 2019 மற்றும் 27- 4 -2019 தேதிகளில் நடத்தியது.

 

அப்போது திருச்சி கிளை சங்க தலைவர் குரு சுயஞ்ஜோதி சுவாமிகள் ,குன்னூர் ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்க குரு பிரகாஷ் சுவாமிகள், திருச்சி ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமையிலும் திருச்சி மடத்தில் சற்குரு, சிஷ்ய வாரிசு குரு சுவாமிகள் மற்றும் ராமலிங்க அடிகளார் திருமேனி சிலைகளும் லிங்கமும் வைத்தனர். அப்பொழுது சிலை வைக்கக்கூடாது என ஸ்ரீ சற்குரு சுவாமி ராஜயோக திருமட அறக்கட்டளை செயலர் தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்து சிலையை அப்புறப்படுத்தினார். இதனால் சற்குரு மடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

nn

 

வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் 24- 5 - 2019 அன்று தினேஷ்குமார் குழுவினர் 104 ஆம் ஆண்டு குருபூசை தின விழாவை நடத்துகிறார். 

 

மிக நீண்ட பாரம்பரிய மிக்க இந்த சற்குரு நாதர் தியான மண்டபம் நீதிமன்றம், காவல்நிலையத்தில் புகார் என தற்போது பெரிய பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சர்ச்சரவுக்ளுக்கு இடையே குருபூசைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.