Skip to main content

ரயில்வே பயிற்சி நிறுவனத்தில் அம்மை நோய் பரவல்; மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

trichy railway training centre students related incident action taken by trichy corporation 

 

திருச்சி ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் 420 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மொத்தம் 14 பேருக்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது பேரை ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ளவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று திருச்சி கோட்ட செயலாளர் வீர சேகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இதனையொட்டி இன்று மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான உணவு மற்றும் இணையதளம் மூலம் வழங்கக்கூடிய பயிற்சி வகுப்புகள், மருந்துகள் உள்ளிட்டவை சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "ரயில்வே நிர்வாகம் அம்மை நோய் பாதித்தவர்களை இங்கு வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்காமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த தகவல் அறிந்து பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்தி இங்கு இருக்கக்கூடிய மாணவர்களை பரிசோதனை செய்து அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அம்மை நோய் பாதிப்பை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இருப்பினும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மற்ற பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் ரயில்வே நிர்வாகம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.