Skip to main content

திருச்சியில் ஒரே நாளில் 14 போலீசாருக்கு கரோனா!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020


 

trichy police coronavirus admit at hospital

 

திருச்சி மாவட்டத்தில் நேற்று (22/06/2020) ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 

கரோனோ பாதிப்பு ஏற்கனவே திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனரின் டிரைவருக்கு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து துணை கமிஷ்னருடன் செல்லும் அதிரடி படையினருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்களில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக கே.கே.நகரில் உள்ள காவலர் குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல் திருச்சி மாநகரின் 5- ஆவது வார்டு பாரதிநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலகம் சஞ்சீவி நகரில் உள்ளது. அந்த அலுவலகத்திற்குக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து மோட்டர் வாகன ஆய்வாளர் ஒருவர் வந்து சென்று உள்ளார். அவர் மீண்டும் தஞ்சை சென்றவுடன் அவருக்குச் சோதனை செய்த போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இதைக் கேள்விப்பட்ட திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் பீதி அடைந்து அங்குள்ள ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும். அந்த அலுலகமே முடங்கிப் போனது. இதே போன்று ஒரு வழக்கு விசாரணைக்காக முசிறி காவல்நிலையத்திற்கு வெள்ளுர் பகுதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். விசாரணைக்கு வந்த ஒருவரின் மனைவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முசிறி காவல்நிலையம் மூடப்பட்டு அங்கிருந்து காவலர்கள் அனைவரும் முசிறி திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 

இப்படி அதிரடியாக கரோனா பரவல் இருந்தாலும், திருச்சியில் மட்டும் இதுவரை 20,000- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துள்ளது சுகாதாரத்துறை. அதில் 266 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 80- க்கும் மேற்பட்டோர் தொடர்  சிகிச்சையில் இருக்கிறார்கள். 

 

நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்சி மாநகராட்சி சார்பில் 7 இடங்கள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும், முகாம்களுக்கு திருச்சியில் ஶ்ரீரங்கம் பி.எஸ். இந்து பள்ளி, தெற்கு பாண்டமங்களம் மாநகராட்சிப்பள்ளி, ஏர்போர்ட் காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி மாநகராட்சி பள்ளி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளிகள் உட்பட 7 இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

'திருச்சியில் கரோனாவின் பரவல் புயல்வேகத்தில் பரவிக்கொண்டு இருப்பதால் திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பொன்முருகேஷன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.