Skip to main content

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை! 

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
Trichy

 

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் சித்தாந்த் சிங். (24 வயது). இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு எல்.எல்.பி படித்து வருகிறார். 

 

கரோனோ வைரஸ் காரணமாக தேசிய சட்டக்கல்லூரி விடுமுறை விடப்பட்டு விடுதிகள் மூடப்பட்டது. இந்த கல்லூரியில் பெரும்பாலும், வெளிமாநில மாணவர்களே படித்து வருகிறார்கள். 

 

இந்த நிலையில் சித்தாந்த் சிங் என்பவர் கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி மாநகரில் மன்னார்புரம் அருகே உள்ள நடுத்தெருவில் கடந்த ஜீன் 1ம் தேதி முதல் தங்கியிருந்திருக்கிறார்.  

 

கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. ஆனால் உட்புறம் தாழ்டப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் போலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ள சித்தாந்த் சிங் முகத்தை பிளாஸ்டிக் கவரினால் மூடி முடிச்சு போட்டுக்கொண்டு தன்னை தானே மூச்சு விட முடியாமல் செய்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. 

 

உடலை கைப்பற்றிய கண்டோன்மென்ட் போலீஸ் அவருடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

வெளிமாநிலத்தில் இருந்து தேசிய சட்டக்கல்லூரியில் வந்து படிக்கும் மாணவர் ஒரு பேரழிவு காலத்தில் வீட்டிற்கு சென்று விட்டாரா என்பதை உறுதிபடுத்தாமலே இருந்ததும், கல்லூரியின் கவனக்குறைவே என்கிறார்கள். 

 

கல்லூரியில் மிக நன்றாக படிக்கும் மாணவன் என்று பெயர் எடுத்த ஒருவனின் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்று விட்டதே என்று  வருத்தப்படுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.