Skip to main content

நகை கொள்ளையர்களை காவல்துறையினர் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள்- லலிதா ஜூவல்லரி கிரண்!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரியில் ஏறத்தால 100 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வடஇந்திய கொள்ளையர்களா? கொள்ளையில் நகைக்கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? பழைய கொலையாளிகள் தற்போது நகைக்கொள்ளையர்களாக மாறிவரும் சிலரையும் சந்தேக வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் காவல்துறையினர்.

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 7 விதமான தகவல்களை சோதனை செய்வதற்காகன வேலைகளை முடுக்கி விடப்படுள்ளது காவல்துறை. திருச்சி மாநகரில் உள்ள அத்தனை விடுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை விடுதிகளை காலி செய்தவர்களின் பட்டியல் தயாரித்து அவர்களை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon

நகைக்கடை தரை தளத்தில் உள்ள ஷோகேஸ்களில் மொத்த நகைகளையும் ஒன்று விடாமல் துடைத்து எடுத்து சென்றதால், வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு அமர் ஜூவல்லரியில் இதே போன்று இரவு நேரத்தில் கடையை உடைத்து மொத்த நகைகளையும் எடுத்து சென்ற சம்பவத்தை ஒப்பிடுகிறார்கள் காவல்துறையினர்.

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon


கொள்ளை குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. கடந்த ஆண்டு சமயபுரம் பஞ்சாப்நேஷனல் வங்கியில் துளை போட்டு லாக்கரில் இருந்து 5 கோடி நகைகளை எடுத்த சம்பவம் போன்றே இந்த, கொள்ளையும் நடந்துள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்றார்.

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, மற்றும் மயில்வாகணன் ஆகியோருடன் காலையில் இருந்து அந்த கடையின் முழுவதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கோசல்ராமன், மதன், பெரியய்யா மற்றும் ஏ.சி. கோபாலசந்திரன், கியூ பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன் என ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திலும், திருச்சி மாநகர முழுவதும் அதிரடி காட்டி வருகின்றனர். 

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon

கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக திருச்சி வந்த லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண் கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு வந்தவர். அப்போது அவர் கூறுகையில், காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

trichy laithaa jewelry thief police round up in all places thief identify in very soon


அதிதீவிரம் காட்டும் காவல்துறை  கொள்ளையடித்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.