Skip to main content

"பிறக்கும் குழந்தைகளுக்கும் இருதய நோய் பாதிப்பு அதிகம் உள்ளது!" - மருத்துவமனை டீன் தகவல்... 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

 

trichy government hospital dmk mp siva

 

பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இருக்கும் இருதய நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவியை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இன்று (09/01/2021) திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். 

 

கடந்த சில வருடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இருதய நோய் என்பது ஒரு தவிர்க்க முடியாத நோயாக மாறிவிட்டது. இந்த நோயின் மிக முக்கியப் பிரச்சினை பிறக்கும் குழந்தைகள் இடையே இதயத்தில் (இதயத்துடிப்பு) ஏற்பட்டிருக்கக் கூடிய மற்ற பிரச்சனைகள், இதயத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஓட்டை, இதய வால்வுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய அடைப்புகள் உள்ளிட்டவற்றை 'எக்கோ' என்ற கருவியைக் கொண்டு மட்டுமே கண்டறிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு ஈசிஜி மட்டும் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்தப் புதிய கருவி மூலம் குழந்தைகளுடைய இருதயம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாகக் கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், தனது தொகுதி நிதியிலிருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த கருவியை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சிவா இன்று (09/01/2021) திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். 

 

இந்த நிகழ்வில் பேசிய திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் வனிதா, "திருச்சி அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 500 பெண்கள், குழந்தை பிறப்பதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதில், பிறக்கும் 300 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு காப்பாற்றப்படுகின்றன. ஆனால் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய் என்பது (இன்றைய காலகட்டத்தில்) அதிகமாகி வருகிறது. எனவே அதனைக் கண்டறிய இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

 

"தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு சுமார் 3,000 முதல் 5,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், திருச்சி அரசு மருத்துவமனையில் இது முற்றிலும் இலவசமாகப் பரிசோதிக்கப்படும்" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.