Skip to main content

கல்விச் சுற்றுலா; வெளிநாடு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

trichy district government school students goes to educational tour

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கலை, விளையாட்டு, இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் திரையிடல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 2022-2023 தமிழகம் முழுவதும் 6 வகையான செயல்பாடுகளில் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வழி நடத்திட 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 6 மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் கலை பிரிவில் குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி நட்சத்திரா, சிறார் திரைப்படங்கள் திரையிடலில் பன்னன்கொம்பு அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீவர்சன், எடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி மித்ரா, இலக்கிய மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட மண்ணச்சநல்லூர் பெண்கள் நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி கலை பிரியா, விளையாட்டில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் பிரசன்னன், வானவில் மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட எசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் தாரேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தீபா உள்ளிட்டவர்கள் இந்த கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க உள்ளனர்.

 

இவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதால், தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ,மாணவிகளுக்கான உரிய ஒப்புதல் கடிதங்கள் மற்றும் அவர்களுக்கான கடவுச்சீட்டுகள் அனைத்தும் கடந்த 13 ஆம் தேதிக்குள் பெறப்பட்டுத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா செல்வதற்கான தேதி இதுவரை குறிப்பிடப்படாமல் உள்ளது. விரைவில் சுற்றுலா செல்வதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.