Skip to main content

திருச்சி : ஏர் இந்தியா ஊழியர் உள்பட 5 பேர் சிக்கினர் - ரூ1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
ddd

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தொடர்ந்து தங்கம் கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவது வாடிக்கையாகி இருந்து வருகிறது. 

 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து திருச்சிக்கு அதிகாலை வரவுள்ள ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்  பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி வந்து விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

 

ஆனால் விமானத்தில் வந்த எந்த பயணிகளிடமும் கடத்தி வந்ததாக கூறப்படும் தங்கம் சிக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த நிலையில் இருந்த அதிகாரிகளு மேலும் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது, அதன்படி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலமாகத்தான் தங்கம் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கை மாறப் போவதாகத் தகவல் கிடைத்தது. 


இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் வெளிப்புற பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய பகுதியிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத் (50) என்பவர் முக்கிய பிரமுகர்கள் வரும் பகுதியான கார்கோ பகுதி வழியாக வந்தார். அங்கு  தங்கம் கடத்தல் கும்பலை சந்தித்தார். 

 

இதனை அதிகாரிகள் எதர்ச்சையாக கண்காணித்த போது கோபிநாத் தனது கையில் வைத்திருந்த தங்கக் கட்டிகளைத் தங்கக் கடத்தல் கும்பலிடம் கொடுக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.


இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் தூபாயிலிருந்து வந்த பயணி உள்பட மேலும் மூவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 5பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2இல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

சுங்கத்துறை அதிகாரிகளால்  பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ1.5 கோடி மதிப்புடைய என தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான சிறுவன்; தீவிர தேடுதல் பணியில் மீட்புப் படையினர்

Published on 22/06/2024 | Edited on 23/06/2024
The Mysterious Boy in the Kollidam River; Rescuers in intensive search

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயர தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் இன்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்க வந்துள்ளார். திடீரென சிறுவன் காணாமல் போன நிலையில் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்; 38 கடைகளுக்குச் சீல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
38 shop sealed for selling banned tobacco

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆணையர் காமினி அறிவுறுத்தலின் பேரில், காவல் ஆணையர் அலுவலகம் மூலமாக மாநகர பகுதியில் உள்ள 13 காவல் நிலையங்களிலிருந்து  72 பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பெறப்பட்டன.

இதனடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதலின் பேரில் மாநகர பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகள் அனைத்தும் இன்று  அமைக்கப்பட்ட 9 குழுக்களில் அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் உள்ளடங்கியோர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 38 கடைகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்; தொடர்ந்து இது போன்ற கடைகள் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சீலிடப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைகள் சீல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இது போன்று பொதுமக்களும், உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.