Skip to main content

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மூன்றாம் பாலினத்தவர்கள்..! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Transgenders who petitioned the District Collector

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

 

வாடகை வீடுகளும் சில மனிதநேயர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. சராசரி பொதுமக்கள் வீடுகள் வாடகைக்கு தரவும் தயங்குகின்றனர். இதனால் ஊருக்கு வெளியே பாழடைந்த வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர்.

 

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 10க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள், மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருளை சந்தித்து மனு ஒன்றை தந்தனர். அதில், எங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என ஏற்கனவே மனு தந்துள்ளதை நினைவூட்டி இலவச வீட்டு மனை வழங்கக் கோரி நினைவூட்டல் மனு தந்தனர்.

 

அந்த மனுவிலேயே தங்களுக்கும் ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும். அரசு நலத்திட்ட சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் நம்பிக்கை தந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.