Skip to main content

பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Transfer of various IAS officers

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, ஜவுளித்துறை ஆணையராக  ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மோகன் 'முதல்வரின் முகவரி' திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக  ஐஏஎஸ் அதிகாரி கஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதியோராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை ஆணையராக இருந்து சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சுஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் குழந்தை நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இப்படியாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்