Skip to main content

ஒரே நாளில் 150 போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு; சேலம் எஸ்.பி. அதிரடி!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Transfer order for 150 policemen in one day; Salem SB Action!

 

சேலம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 150 காவலர், எஸ்.ஐ. உள்ளிட்டோரை இடமாறுதல் செய்து எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்ட காவல்துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளும், அதற்கு மேலும் பணியாற்றி வரும் எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள், காவலர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு, சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (ஜூலை 13), மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தலைமையில் நடந்தது. 

 

கடந்த காலங்களில், இடமாறுதலில் செல்ல விரும்பினாலும் காவலர்களுக்கு அத்தனை எளிதில் மாறுதல் உத்தரவு கிடைக்காது. இதனால் வேறு வழியின்றி, உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் புள்ளிகளைப் பிடித்து இடமாறுதல் ஆணை பெறும் வேலைகள் நடந்து வந்தன. 

 

இந்நிலையில், ஸ்ரீஅபிநவ் சேலம் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற பிறகு, இடமாறுதல் கலந்தாய்வை சீர்படுத்தினார். அரசியல் மற்றும் அதிகாரிகள் தலையீடின்றி காவலர்கள், எஸ்.ஐ.க்கள் விரும்பும் காவல்நிலையங்களுக்கு மாறுதலில் செல்லும் கலந்தாய்வை அவரே முன்னின்று நடத்தத் தொடங்கினார். 

 

அதன்படி, கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களிடம், எந்த காவல்நிலையத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்? என்று எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் விசாரித்து, அவரே அதற்கான ஆணையை வழங்கினார். புதிய இடத்தில் தவறு செய்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

 

இந்த கலந்தாய்வு மூலம் ஒரே நாளில் காவலர், தலைமைக் காவலர், எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 150 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.