Skip to main content

சிறைக்காவலர் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சிக் காவலர்கள்!!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Training guards who have completed prison guard training !!

 

திருச்சி மத்திய சிறையில் அடிப்படை 6 மாத கால பயிற்சியை 197 சிறைக் காவலர்கள் இன்று (03.02.2021) நிறைவு செய்தனர். இந்த விழாவில் 176 ஆண் சிறைக் காவலர்களும் 21 பெண் சிறைக் காவலர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புழல் வேலூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உள்ளிட்ட சிறைகளில் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

 

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டம் சார்ந்த விதிமுறைகளையும் அடிப்படை சட்டங்களையும் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்து. மேலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளையும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆறுமாத காலமாக திருச்சி மத்திய சிறையில் இருந்து தங்களுடைய பயிற்சியை முடித்திருக்கக் கூடிய இந்த சிறைக்காவலர்கள், இன்று தங்களுடைய பயிற்சியை நிறைவு செய்து அதற்கான அணிவகுப்பு மரியாதையை செலுத்தினார்கள்.

 

Training guards who have completed prison guard training !!

 

இந்த அணிவகுப்பு மரியாதையை சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைவர் சுனில் குமார் சிங் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்தப் பயிற்சி நிறைவு விழாவில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் சிறை பயிற்சிப் பள்ளியின் முதல்வர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

பயிற்சி முடித்த காவலர்கள் தங்களுடைய பயிற்சி காலத்தில் அவர்கள் செய்த சில பயிற்சிகளை செய்து காண்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயராமன் IPS காவல்துறை தலைவர் திருச்சி மண்டலம், லோகநாதன் IPS காவல் ஆணையர் திருச்சி மாநகர், ஆனி விஜயா IPS திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் முதலாம் அணி தளவாய் திரு ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.