Skip to main content

பேரிடர் காலத்திலும் வணிக நோக்குடன் செயல்படுவதா? -மத்திய அரசுக்கு கரோனா விழிப்புணர்வு குழு கண்டனம்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மே.03 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20 முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
 

இதுதொடர்பாக கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 

 

ஏற்கனவே ஒரு மாத காலத்திற்கும் மேலான ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருமானம் இன்மையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த  தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை நாளை முதல் மீண்டும் வசூலிப்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சொல்லொன்னா துயரங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

 

 

toll plaza


 

இதன் காரணமாக தன்னார்வலர்கள் செய்து வரும் மனிதநேயப் பணிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் தன்னார்வலர்கள் திட்டமிட்ட பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும். இதனால் ஏழை-எளிய மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவர்.
 

ஏற்கனவே ஒப்பந்தக் காலத்தையும் தாண்டி பல ஆயிரம் கோடி சுங்கக் கட்டண வசூல் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிய தனியார் சுங்க  நிறுவனங்களுக்கு பேரிடர் காலத்திலும் கொள்ளை லாபம் ஈட்ட அரசு வழிசெய்து கொடுத்து, அதன் சுமையை மக்கள் மீது திணிப்பது ஏற்புடைய செயல் அன்று.
 

http://onelink.to/nknapp

 

அதோடு தற்போது பொதுவான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மிகப்பெரும் அளவில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறப் போவதில்லை. ஆகவே, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படும் வரையிலான சகஜ நிலை திரும்பும் வரை சுங்கக் கட்டண வசூலைச் செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
 

 

தற்போதைய பேரிடர் காலத்தில் சேவை நடவடிக்கைகளுக்கே அரசு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர லாப நோக்க வணிக நடவடிக்கைகளுக்கு அல்ல என்பதையும் நாங்கள் அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.