Skip to main content

"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..!''

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

தனது தொழில் சாமர்த்தியத்தின் மூலம் உலகம் முழுவதும் கிளை பரப்பிய 'சரவணபவன்' ராஜகோபால் இன்று உலகத்தில் இல்லை. 


ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் 3-வதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு இடையூறாக இருந்த அவரது கணவர் சாந்தகுமாரை, கூட்டாளிகளை ஏவி கொலை செய்தார். " 3-வது திருமணம் செய்தால் இன்னும் தொழிலில் வளர்ச்சியடையலாம் என்று சோதிடர் கூறிய அறிவுரையாலும், ஜீவஜோதி மீதான பொருந்தா காமத்தாலும்" இந்த விபரீதத்தை அறங்கேற்றினார் ராஜகோபால்.

 

saravana bhavan rajagopal


 

இந்த வழக்கில் 2004-ஆம் ஆண்டில் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடினார். வேளச்சேரி போலீஸாரும் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமோ 10 ஆண்டு சிறையை ஆயுளாக அதிகரித்தது. உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ததோடு, ஜூலை 7-ந்தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என கெடு விதித்தது.

 

jothi


 

ஆனால், கடைசி நாளில் சரண் அடைவதில் விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் முறையிட்டார். ஆனால், நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, 8-ந்தேதி ஆம்புலன்சில் வந்து சரண் அடைந்தார். அதன்பிறகு சிறைக்கு செல்லாமலேயே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வடபழனி விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று காலை ராஜகோபாலின் உயிர் பிரிந்தது.


 

சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து, சிறைக்கு செல்லாமலேயே தப்பி வந்த சரவணபவன் ராஜகோபால், இப்போது சிறைக்கு செல்லாமல் இறந்துபோனார். (இடையே விசாரணைக்காலத்தில் மட்டும் சில நாட்களில் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.) 


 

வேளச்சேரி போலீஸார் இந்த வழக்கில் மிகச் சிரமம் எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். ஆனால் வழக்கு விசாரணையின்போது வாய்தா வாங்கியே இழுத்தடித்தார். சட்டத்தை வளைத்த ராஜகோபால் போலீஸாருக்கும் சில சலுகைகளை வழங்கி தங்களுக்கு சாதகமான காரியங்களை சாதித்து கொண்டார். குறிப்பாக காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஸ்வீட், டீ, சாப்பாடு ஆகியவற்றை ஸ்பான்சர் பண்ணுவது, போலீஸாருக்கு சாப்பாட்டு டோக்கன் வழங்கி அவர்களை இப்போது வரை ஆதரவாளராகவும் வசப்படுத்தி வைத்திருக்கிறார். 

 

saravana bhavan rajagopal


 

சென்னையில் 'சரவண பவன்' கிளை சார்பில் அந்தந்த காவல் நிலையங்களுக்கு மாதம் 200 முதல் 300 சாப்பாட்டு டோக்கன்கள் வழங்கப்படும். அதை காவலர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இந்த டோக்கனை பயன்படுத்தி எந்த கிளையிலும் சாப்பிடலாம். ஒருமுறை சரவண பவனின் ஒரு கிளையில் சாப்பிட்ட லோக்கல் போலீஸாரிடம் பில் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மறுநாள் அந்த ஓட்டலுக்கு செல்லும் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றிவிட்டனர் போலீஸார். மேலும் ஓட்டல் முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதித்தனர். இதனால் வியாபாரம் டல்லாக, ஓட்டல் தரப்பு, போலீஸாரிடம் முறையிட்டது. 
 

அப்போது, "லோக்கல் போலீசுக்கு கூட சாப்பாடு போட மாட்டீர்களா? என காவல்துறை தரப்பில் எகிற", "நிறைய பேர் வந்து லோக்கல் காவல் நிலையத்தின் பெயரை சொல்லி சாப்பிட்டு செல்கின்றனர்" என ஆதங்கப்பட்டுள்ளனர். இதன்பிறகே டோக்கன் சிஸ்டம் அமலுக்கு வந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எனக்கு பயம் இல்ல... ரஜினி கெத்து யாருக்கு வரும்... மோடியை ரொம்ப பிடிக்கும்... ஜீவஜோதி அதிரடி பேட்டி!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஹோட்டலில் பணியாற்றிய ராமசாமி என்பவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இதனால் ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கொலை செய்தார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கடந்தாண்டு மரணமடைந்தார்.

 

jeeva jothi



ஜீவஜோதி தனது கணவர் இறப்புக்கு பிறகு, தஞ்சை மாவட்டத்தில் குடிபெயர்ந்தார். அதன் பின்பு தன் பள்ளி நண்பரை மறுமணம் செய்து தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.  அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் போதும்தானே. அதனால்தான் கட்சியில் இணைந்துள்ளேன். என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்று உயிருடன் உங்களுடன் பேசி கொண்டிருப்பதற்கு ஜெயலலிதாதான் காரணம்.

 

jeeva jothi



இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திட்டங்களை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும்,  அதனால்தான் அவருக்கு ஆதரவு பெருகுகிறது என்றும், ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் வேலையை செய்கிறார்கள்.. இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.. பாதுகாப்புக்காக நான் பாஜகவில் சேரவில்லை.. எனக்கு எப்பவுமே பயம் கிடையாது.. பயம் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன்... தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக அசுர வெற்றி பெறுவதை பார்க்கத்தான் போறீங்க.. குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியினருக்கு புரிதல் இல்லை.. அதனால்தான் குற்றம் சாட்டுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன்.. ஏனெனில் பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.. இந்த கெத்து யாருக்கு வரும்.. இந்த விவகாரத்தில் ரஜினிக்குதான் ஆதரவு பெருகி கொண்டு போகிறது" என்றும் கூறியுள்ளார்.

 

 

Next Story

அரசியல் களத்தில் இறங்கிய ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார்? பாஜகவின் அதிர வைக்கும் திட்டம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இணைந்தார். நடிகர் ராதாரவியை தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்தார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்பெற பல்வேறு நடவடிக்கையை பாஜக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 

jeeva jothi



இந்த நிலையில்  தமிழகத்தில் மிகப் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால், ஜீவஜோதி மற்றும் பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் சரவணபவன் ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அப்போது தண்டனையை அனுபவிக்காமலேயே சரவணபவன் ராஜகோபால் மறைந்தது தனக்கு ஏமாற்றம் தருவதாக ஜீவஜோதி கூறியிருந்தார். இந்த நிலையில் சரவணபவன் ராஜகோபால் வழக்கு புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார் என்று கூறுகின்றனர். சமீபத்தில் ஜீவஜோதியை சந்தித்த வானதி சீனிவாசன் உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஜீவஜோதி பாஜகவில் இணைந்ததாக கூறுகின்றனர். 


சமீபத்தில் பாஜகவினர் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை கட்சியில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஜீவஜோதி நன்கு பேசக்கூடியவர், எதையும் சமாளிக்கும் தைரியம் இருக்கும் பெண் என்ற காரணத்தினால் பாஜகவில் சேர்த்ததாகஅக்கட்சியினர் கூறிவருகின்றனர். அதேபோல் அரசியலில் சில கட்சிகளில் ஜீவஜோதியின் உறவினர்கள் பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.   

 

CAB