
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது1,697லிருந்து குறைந்து 1,661 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று குறைவு. சென்னையில் மட்டும் இன்று 206 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 236 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில்23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,984 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,623 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,94,967 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவை-211, ஈரோடு-117, செங்கல்பட்டு-111, திருவள்ளூர்-61, தஞ்சை-90, திருப்பூர்-91 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)