Skip to main content

ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா!!! -தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!! 

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
TODAY CORONA RATE IN TAMILNADU

 

இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், அறிகுறி உள்ளவர்களையும் அறிகுறி இல்லாதவர்களும் அரசு ஒரே விதத்தில் அணுகுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் யோசனை கூறினார். ஆனால் முதல்வரின் உத்தரவுபடி குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் முகக் கவசங்கள் ஏற்கனவே  விநியோகிக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 62 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

முதியவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. களப்பணியாளர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மருந்துகள் வழங்கப்படுகிறது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4,343 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களாக மூவாயிரத்தை தாண்டி பதிவான நிலையில் இன்று முதன் முறையாக தமிழகத்தில் 4,300க்கும் மேற்பட்ட  எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 2,027 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்தமாக 62,598 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

TODAY CORONA RATE IN TAMILNADU


சென்னையில் 28வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துமனைகளில் 37 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 33 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர்  கரோனாவிலிருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இதுவரை 56,021 பேர் மொத்தமாக குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

மதுரையில் இன்று ஒரே நாளில் 259 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை  கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,117 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,139 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய இன்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 74 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை சேலம் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.