Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு; தமிழாசிரியர் செல்வேந்திரன் புரோக்கராக மாறியது எப்படி?

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, விஏஓ, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக திருச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த விமல்குமார் என்பவரை முசிறி அடுத்த மங்கலம் கிராமத்தில் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாளிலே சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் என்பவர் சரணடைந்தார்.

TNPSC EXAM TRICHY GOVERNMENT STAFF CBCID POLICE

நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்ட செல்வேந்திரனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்தநிலையில் செல்வேந்திரன் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்வேந்திரன் திருச்சியை அடுத்த துறையூர் அருகே உள்ள மூவானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து வருகிறார்.
 

நெடுஞ்சாலைத் துறை ஊழியர் விமல்குமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தபோது... துறையூர் தமிழாசிரியர் செல்வேந்திரனிடம் ரூபாய் 7 லட்சம் கொடுத்து அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் தமிழாசிரியர் செல்வேந்திரன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். செல்வேந்திரன் தன் மனைவிக்கும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக நம்பிக்கை கொடுத்ததால் செல்வேந்திரன் பலரிடம் அரசு வேலைக்கு பணம் வாங்கும் புரோக்கராக மாறியிருக்கிறார்.

தமிழாசிரியர் செல்வேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் இன்னும் பல கருப்பு ஆடுகள் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.