Skip to main content

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சி.வி.கணேசன்

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

tn minister ganesan started various projects

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பள்ளி கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பெண்ணாடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் பிரளயகாலேஸ்வரர், ஆமோதனாம்பாள் ஆலயம் இவ்வாலய இறைவனையும் இறைவியையும் வழிபடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

 

மேலும் 63 நாயன்மார்களில் கலிக்கம்ப நாயனார், மறைஞானசம்பந்தர் ஆகிய இருவரும் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர்கள். இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என பெயர் வருவதற்கு காரணம், ஒரு முறை இந்த ஊருக்கு தென்பகுதியில் செல்லும் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்தது மக்கள் தங்களை காப்பாற்றுமாறு ஆலயத்திற்கு ஓடி வந்து இறைவனிடம் கையேந்தி வேண்டி நின்றனர். அப்போது இறைவன் நந்தி பெருமானுக்கு ஊருக்குள் வரும் வெள்ளத்தை முழுவதையும் குடித்து விடும்படி ஆணையிட்டார்.  இதையடுத்து நந்தி-பெருமான் சிவபெருமானை நோக்கி மேற்கு முகமாக இருந்தவர், கிழக்கு நோக்கித் திரும்பி பெருகி வந்த அந்த வெள்ள நீரை உறிஞ்சினாராம். அந்த பிரளயத்தை காத்ததா ஆலய இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயர் வந்தது.

 

மேலும் இந்த ஆலயதிற்கு "கை வழங்கீயஈசன்" என்ற பெயரும் உண்டு. இதற்கு காரணம் கை, கால் உபாதை உள்ளவர்கள் செயல் இழந்தவர்கள் இவ்வாலயம் வந்து சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு நிவர்த்தியாகிறது என்ற பலத்த நம்பிக்கை உள்ளது. இக்கோயில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படவில்லை. இதுகுறித்து சிவனடியார்கள் இப்பகுதி பக்தி மார்க்கத்தில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் அறநிலையத்துறைக்கு பலமுறை விண்ணப்பித்தனர். கோயில் புனரமைப்பு செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோரி இதனடிப்படையில் தொல்லியல் துறையினர் அனுமதியுடன் அறநிலையத்துறை கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

இதற்காக கோவில் நிதியாக அறநிலையத்துறை 39 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மற்றும் உபயதாரர்கள் 43 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்கான பாலாலய பூஜை நேற்று(27.5.2022) காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் பேரூராட்சி சேர்மன் அமுத லட்சுமி ஆற்றலரசு, உதவி ஆணையர் சரவணன், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், கோயில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவுமான கணேசன் மற்றும் தருமபுர ஆதீனம் சட்டநாத தம்பிரான் சாமிகள் ஆகியோர் ஆலய பூஜை செய்து கோயில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

tn minister ganesan started various projects

 

இதையடுத்து திட்டக்குடி நகராட்சியில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதி திட்டத்தின் கீழ் அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் பள்ளியில் அமர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அந்த புதிய கட்டிடத்தையும் அமைச்சர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அடுத்து கூத்தப்பன் குடிக்காடு வசிஸ்டபுரம்., பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் திறந்துவைத்தார், இதில் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிவராமன் நகராட்சி தலைவர் வெண்ணிலா, கோதண்டம் மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர், திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.