Skip to main content

“நா யாரு... என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா?” - ஆளுநரின் ஆலோசகர் அடாவடி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

tn Governor rn ravi advisor involved in an argument with an Ola driver

 

குடி போதையில் ஓலா கார் டிரைவரை தாக்கியதாகக் கூறி தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகராக இருப்பவர் திருஞானசம்பந்தம். இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து முகலிவாக்கம் வரை செல்ல ஓலா காரை புக் செய்துள்ளார். அப்போது விமான நிலையத்துக்கு வந்த காரில் ஏறி அமர்ந்த திருஞானசம்பந்தம், வரும் வழியில் இருந்த ஏடிஎம்-ல் நிறுத்தச் சொல்லியுள்ளார். அதன்பேரில் ஓட்டுநரும் காரை நிறுத்தியுள்ளார். பின்னர், வழியில் ஆங்காங்கே திடீர் திடீரென காரை நிறுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், குறிப்பிட்ட நேரத்தில் இன்னொரு சவாரிக்கு செல்லவேண்டும்.. அதனால் எல்லா இடத்திலும் காரை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருகட்டத்தில்  நந்தம்பாக்கம் ஹோட்டல் மவுண்ட் அருகே காரை நிறுத்திய ஓட்டுநர்., திருஞானசம்பந்தத்தை காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். குடி போதையில் இருந்ததாகக் கூறப்படும் திருஞானசம்பந்தம், “நான் யாருன்னு தெரியுமா?” எனக் கூறி, மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

 

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்... இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகரான திருஞானசம்பந்தம் என்பது தெரியவந்தது. இதனால் அதிருப்தியடைந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து, திண்டிவனத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஓலா டிரைவர், ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “குடும்ப சூழ்நிலை காரணமாக நான் ஓலா கால் டாக்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை விமான நிலையம் முதல் போரூர் வரை செல்ல தனது வாகனத்தை திருஞானசம்பந்தம் என்பவர் முன்பதிவு செய்தார்.

 

பயணி ஏறியவுடன் இறங்கும் இடம் வரை நேரடியாக அழைத்து சென்று விடும் டிரிப்பைத்தான் அவர் தேர்வு செய்திருந்தார். பிறகு, காரில் பயணித்தபோது திருஞானசம்பந்தம் கிண்டி கத்திபாரா வந்தபோது ஏ.டி.எம் பக்கத்தில் 10 நிமிடம் காரை நிறுத்த சொன்னார். ஆனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டார். கார் பயணிக்கத் தொடங்கியபோது மீண்டும் ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். எனது வேலைப் பளு காரணமாக அவர் அப்படி கூறியபோது வேறு வாகனத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

 

அப்போது காரில் வந்த பயணி திருஞானசம்பந்தம், ‘உனக்கு அவ்வளவு திமிரா.. என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா? நான் யார்னு தெரியுமா?’ என்று மிரட்டினார். அப்போது எனது கன்னத்திலும் ஓங்கி அறைந்தார். அதை செல்போனில் பதிவு செய்தபோது செல்போனையும் தட்டிவிட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.