tn government companies agreement sign invest 15,128 crores

Advertisment

ரூபாய் 15,128 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூபாய் 15,128 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 47,150 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது. 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொளி மூலமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், சீனா, கொரியா, ஆஸ்திரேலியா, தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த நிகழ்வில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.