Skip to main content

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., மு.க.ஸ்டாலினை ஓரம் கட்டிய 'நாம் தமிழர்' காளியம்மாள்! - இதுவும் தேர்தல் கணக்குதான்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

tn assembly election affidavit download election commission site

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறவில்லை. தேர்தலுக்குப் பணத்தை இறைத்த வேட்பாளர்கள், முடிவை எதிர்நோக்கி உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலின்போது, வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

tn assembly election affidavit download election commission site

 

இந்த வேட்புமனுக்களையும், பிரமாணப் பத்திரத்தையும், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் செய்யும்போது, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும்.

 

tn assembly election affidavit download election commission site

 

அந்த வகையில், போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மனு, இன்றைய நிலவரப்படி, 3,343 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பிரமாணப் பத்திரங்களின் தரவிறக்கம் என்பது, 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

 

tn assembly election affidavit download election commission site

 

மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாணப் பத்திரம் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே, புதிய சாதனையாகப் பேசப்பட்டது. பத்மபிரியாவும் இந்தத் தகவலை கேட்டு ஆச்சரியப்பட்டார்.

 

tn assembly election affidavit download election commission site

 

ஆனால், இவர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி, பூம்புகார் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் பிரமாணப் பத்திரம், 7 லட்சத்து 59 ஆயிரம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.   

 

tn assembly election affidavit download election commission site

 

யார் இந்த காளியம்மாள்?
 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு,  வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டவர். அப்போது, 60,515 வாக்குகள் பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் 66 முறை மட்டுமே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை, பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டபோது, ஏழரை லட்சத்தைக் கடந்திருக்கிறது.

 

tn assembly election affidavit download election commission site

 

பிரமாணப் பத்திரத்தில் என்னென்ன இடம்பெற்றிருக்கும்? 
 

வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், அவர்களது முழு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். கல்வித் தகுதி, வருமானம், கடன் தொகை, சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மக்களின் மனதையோ, ஆர்வத்தையோ எந்தத் தராசிலும் வைத்து எடைபோட்டுவிட முடியாது என்பதை, காளியம்மாளின் பிரமாணப் பத்திரம் தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை உறுதி செய்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.