Skip to main content

''சின்னப் பிரச்சனை என்றாலே அது திமுக கூட்டணியில் தான் ஏற்படும்!'' - ஜி.கே.வாசன் பேட்டி! 

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

tmc gk vasan pressmeet

 

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (04.01.2021) திருச்சியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், ''இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இணைந்து மண்டல அளவிலான கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் களப் பணிகள் துவங்குவதற்கும், தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கைகள் குறித்து பேசுவதற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

 

நேற்று முன்தினம் திருநெல்வேலியில் தென் மண்டல கூட்டம் நடைபெற்றது. நேற்று ஈரோட்டில் கொங்கு மண்டல கூட்டம் நடைபெற்றது. இன்றைய தினம் திருச்சியில் மண்டல கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுடைய செயல்பாடு குறித்தும், எதிர்க்கட்சியுடைய செயல்பாடு குறித்தும் கலந்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் நெருங்கும்போது படிப்படியாக செய்யக்கூடிய பணிகள் குறித்தும் விவாதித்து இருக்கிறோம்.

`

சட்டமன்றத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியான நிலையை எடுத்திருக்கிறோம். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். சின்னப் பிரச்சனை என்றாலே அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான் ஏற்படும். மண்டல கூட்ட ஆய்வு முடிந்த பிறகு மாவட்டத் தலைவர்களுடன் பேசி, உண்மை களநிலவர நிலையை அறிந்து பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சியோடு பேசவுள்ளோம்.

 

உடல்நிலை சரியில்லை என்பது எல்லோருக்குமானதுதான். ரஜினிக்கு உடல்நிலை சரியாகி நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதான் தமிழ் மாநிலக் காங்கிரசுடைய விருப்பமும், என்னுடைய விருப்பமும் கூட.

 

முதன்மைக் கட்சியாக விளங்கும் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களோடு இணைந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கண்டிப்பாகப் பணியாற்றும். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான  நான் அதிமுகவோடு கூட்டணி குறித்துப் பேசினால்தான், எங்கள் கட்சிக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குகிறார்கள் என என்னால் சொல்ல முடியும்.

 

தென்மாவட்டம் முழுவதும் அழகிரி உயர்ந்த பொறுப்பில் இருந்து இருக்கிறார். அவருடைய வார்த்தையின்படி ஸ்டாலின் முதல்வராக மாட்டார். வெறும் போஸ்டரில் மட்டும் தான் அவர்களால் முதல்வர் என்ற பெயரை பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியிருப்பது அவருடைய கருத்து. எங்களுடைய மடியில் கனமில்லை. என்னுடைய நேர்மையை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதனால் எங்களுக்கு வழியில் பயமில்லை.

 

மக்கள் நலன் கருதி தேர்தலை சரியாகவும் முறையாகவும் நடத்த வேண்டும். கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிர்ப்போ, வேறு பிரச்சனைகளையோ கிளப்ப வேண்டாம். விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும். 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய இந்தச் சட்டத்தில் விவசாயிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளுடைய பேச்சைக்கேட்டு விவசாயிகள் உங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக் கொள்ள வேண்டாம்.

 

திருச்சி மாவட்ட அளவில் நெற்பயிர்கள் மற்றும் மானாவாரி பயிர்களான உளுந்து, கடலை போன்றவை நீர் நிரம்பி வழியும் நிலைக்கு வந்து விட்டது. அரசு தலையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

“தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்” - த.மா.கா கோரிக்கை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
TMc demand Election rules should be relaxed

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தேர்தல் முடியும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) தளர்த்த வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் கட்டத்துக்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முழு முடிவும் வெளியாகும் வரை எம்.சி.சி. இருக்கும்.

எனவே, எம்சிசியை ரத்து செய்ய இன்னும் 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதுவரை ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பல்வேறு அரசு, மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை. வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை, நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் விநியோகம், பொதுமக்கள் மனுக்கள் பரிசீலனை, டெண்டர் அழைப்பு போன்றவை நடக்கவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள மாநிலங்களில் MCC விதிகளை அமல்படுத்துவது நியாயமானது. ஆனால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்சிசியை அமல்படுத்துவது நியாயமானதல்ல. எம்.சி.சி தளர்வு மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிர்வாகம் ஆகியவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் செயல்முறையை பாதிக்காது, ஏனெனில் இங்கு திமுக  ஆட்சி வெளியிடும் அறிவிப்பு அண்டை மாநிலங்களின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மாநிலத்தில் 45 நாட்கள் நிர்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும், மேலும் தேர்தல் ஆணையத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஏப்ரல் 19ம் தேதி இரவு 7 மணிக்கும் நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் தேர்தல் ஆணையம் செய்த குழப்பம்  மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்தது, பணம் ரூ.50000 உச்சவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து இங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே, மருத்துவமனை, கல்லூரி சேர்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தேர்தல் விதிமுறைகள்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. எனவே  த.மா.கா  இளைஞர் அணி சார்பாக  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.