Skip to main content

மணல் கொள்ளை என கூறி வாகனங்கள் பறிமுதல்... வாகனத்தை மீட்டுத்தரக் கோரி உரிமையாளர் ஆட்சியரிடம் மனு...!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலையை இடித்து தரைமட்டம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து கடந்த ஒரு வாரமாக இடித்து வந்தார் பழைய கட்டிடங்கள் இடித்து அவற்றை அப்புறபடுத்தும் தொழில் செய்து வரும் வேலூர் மாவட்டம் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த தமீம் மரைக்காயர்.

 

Tiruppattur vehicles Confiscation issue

 



அந்த கட்டிடத்தின் கடக்கால் பகுதிகளை தோண்டிய போது அங்கே ஏற்கனவே பார்திக்காக கொட்டப்பட்டிருந்த மணல், கான்கிரீட் மற்றும் கழிவு மண்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளி டிப்பர் லாரி மூலம் வளாகத்தின் உள்ளே கொட்டிக்கொண்டு இருந்தபோது மணல் கொள்ளை நடப்பதாக வருவாய் துறையினருக்கு சிலர் தந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கே நேரடியாக வந்து ஆய்வு செய்துவிட்டு பணியில் ஈடுபடுப்பட்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்ததார் மீது  உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் அதிர்ச்சியான தமீம் மரைக்காயர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சம்பவ இடத்திற்கு நேர்மையான அதிகாரியை விசாரணைக்காக அனுப்பி உண்மையை கண்டறிந்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ள பொய் புகாரை வாபஸ் பெறவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இயந்திம் மற்றும் வாகனத்தை திருப்பி கொடுக்கவும், தவறான தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பட்டுள்ளார்.  

 

Tiruppattur vehicles Confiscation issue

 



இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடத்தை தரைமட்டம் செய்யும் போது பார்திக்காக கொட்டப்பட்டிருந்த மணல், கான்கிரீட் மற்றும் கழிவு மண்களை எடுத்து அப்புற படுத்திய சம்பவத்தை  மணல் கொள்ளை என்று கூறி இயந்திரம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சரியென்றால், இதேபோல் வாணியம்பாடி கச்சேரி சாலை தனியார் தோல் தொழிற்சாலை பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 3 மாதங்களாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. அனுமதியின்றி மணல் விற்ற இடத்தின் உரிமையாளர் மற்றும் மணல் கொள்ளையர்களின் முகவரிகள் தெரிந்தும் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு வருவாய்த்துறை, காவல்துறை மீது வைக்கின்றனர் இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூக நலத்துறையினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.