Skip to main content

"டெல்லி வன்முறையை தடுக்க முதலில் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்"- ஆளூர் ஷா நவாஸ் பேட்டி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி 8- வது நாளாக ஷாஹீன் பாஃக் என்கிற பெயரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

tiruppattur district vaniyambadi viduthalai chiruththaikal katchi

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிப்ரவரி 26- ந்தேதி இரவு விடுதலை சிறுத்தை கட்சியின் இணை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம், "குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்து உள்ளது.
 

குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வைத்துள்ள கூடுதலான கேள்விகள். இதுதான் இப்போது பிரச்சனை. அதை திரும்ப பெற வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். இதே போல் தமிழக அரசு என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போடும் வரை இந்த போராட்டம் தொடரும்.
 

டில்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம், டில்லி காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. முஸ்லிம் கடைகளை பார்த்து தீவைப்பது, சூறை ஆடுவதை காவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது. குஜராத், மும்பை, கோவை ஆகிய நகரங்களில் கலவரம் எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதேபோல் தான் டில்லியில் நடந்த வன்முறை சம்பவம்.
 

டில்லியில் நடந்தது போல் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்று ஹெச்.ராஜா ட்வீட் போடுகின்றார். தமிழக முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்தால் அதற்கு ஹெச்.ராஜா தான் பொறுப்பாவார். மத்திய, மாநில அரசுகள் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் முதலில் வன்முறையை தூண்டும் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்" என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.