Skip to main content

குடும்ப மானம் மரியாதைக்காக 2 இளம் மகள்களைக் கொன்ற தாய்! 

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா (40). இவர்களுக்கு லோகநாதன் (15) என்ற மகன், கோகிலா(13), லலிதா(11) என இரு மகள்கள் உள்ளனர். தனது கணவர் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

 

tttt


 


கடந்த வாரம் திங்கட்கிழமை சாந்தமீனா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சாந்த மீனாவின் மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாகக் கூறி வீட்டில் இருந்த உறவினர்கள் மருதூர் மருத்துமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கோகிலா, லலிதா ஆகியோரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுமிகள் இருவரும் பல் துலக்க, எலி மருந்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியதாக மருத்துவரிடம் கூறியுள்ளனர்.
 

முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிகள் இருவரும் வெள்ளிக்கிழமை ஒன்றன் பின் ஒன்றாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மூலம் மணப்பாறை காவல்நிலையத்தில் சாந்தமீனா சரணடைந்தார்.
 

http://onelink.to/nknapp

 

இது குறித்து போலிசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், திருச்சிக்கும் மணப்பாறைக்கும் இடையே உள்ள சமூத்திரம் என்கிற கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவனும் கொடூர நோயினால் இறந்து விட தனது கணவரின் சகோதர்கள் 3 பேர் அடுத்தது வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவனின் சகோதரர்களில் ஒருவரான ரவிசந்திரன் என்பர் ஆட்டோ டிரைவர். அவர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதனை எனது மகள்கள்தான் எடுத்தனர். 
 

இதில் கடந்த வாரத்தில் தன் மகள்கள் பணம் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதிர்ச்சியடைந்த நான் அவற்றால் தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் 6- ஆவது, 8- ஆவது படிக்கும் மகள்களுக்கு ஞாயிறு மாலை குளிர்பானத்தில் எலி மருந்தைக் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், கொலை வழக்குப்பதிவு செய்து சாந்தமீனாவைக் கைது செய்து இந்தக் கொலைக்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.

 

 

Next Story

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

coimbatore family return pudukkottai temple karur incident 

 

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் குடும்பத்தினர் மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் குடும்பத்தினர் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். பின்னர் வழிபாட்டை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றிச் சென்ற மற்றொரு கனரக வாகனமும் வந்து கொண்டிருந்தது.

 

இந்நிலையில் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தென்னிலை போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 38), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் மனைவி நதியா (வயது 37) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துலட்சுமியின் குழந்தைகள் பாலச்சந்திரன் (வயது 12), கோவர்தனி (வயது10), மேலும் பன்னீர்செல்வம், ரூபன், வெங்கடேஷ், ரஜினி உள்ளிட்ட 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து காவல்துறை அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் மருத்துவமனைக்கு வரவுள்ளனர். அதன் பிறகு முழு விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.