Skip to main content

ரேஷன் கடை திறப்பு விவகாரம்; போராட்டத்தில் குதித்த அதிமுக எம்.எல்.ஏ

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

tindivanam admk mla arjunan ration shop related issue

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளவர் அதிமுகவைச் சேர்ந்த அர்ஜுனன். திண்டிவனம் அருகில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் பகுதி நேர ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கு கடைக்கு சென்று வர ஏதுவாக இல்லை என்று கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் வசதியை முன்னிட்டு ஊருக்கு மத்தியில் புதிதாக ரேஷன் கட்டி திறக்க வேண்டும் என்று பகுதி மக்கள் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இது தொடர்பாக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்ட பிறகும் அந்தக் கடையை மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் மாவட்ட கூட்டுறவு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த ரேஷன் கடை அதே கிராமத்தில் உள்ள சேவை மையத்தின் அருகில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. முறையான திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் எம்.எல்.ஏ அர்ஜுனன் கடை திறப்பு விழா செய்ய ஏப்பாக்கம் கிராமத்திற்கு சென்றிருந்தார். ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு குறித்து எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரிடம் எம்.எல்.ஏ விசாரித்த போது அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லை. காரணம் ஏப்பாக்கம் ரேஷன் கடை உட்பட அப்பகுதியில் புதிதாக மேலும் மூன்று ரேஷன் கடைகளை அமைச்சர் மஸ்தானை வைத்து திறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

கடை திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி அதன்படி கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை தன்னை அழைக்காமல் அமைச்சரை மட்டும் அழைத்து திறப்பு விழா நடத்த அதிகாரிகள் மறைமுகமாக முடிவு செய்து இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ அர்ஜுனன் கட்சியினர்களுடன் ரேஷன் கடைக்கு எதிரில் நின்று தர்ணா நடத்தியுள்ளார். காலை 11 மணி வரை போராட்டம் நடத்திய பிறகு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ கடையை திறப்பதற்கு அனுமதித்துள்ளனர் இதை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் புதிய ரேஷன் கடையை அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.