Skip to main content

டிக்டாக்கினால் கொரோனா வந்ததா? தீவிர கண்காணிப்பு

Published on 01/04/2020 | Edited on 01/04/2020
t

 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர்  சென்னை வேளச்சேரியில் ஒரு ஷாப்பிங் மால் கடையில்  வேலை செய்து வந்துள்ளார்.  கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 


கடந்த 20ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று சேர்ந்துள்ளார்.  இவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தேகத்தின் பேரில் அவரை தீவிர  பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் மேலும் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இவரது மருத்துவ அறிக்கை சென்னை கிங் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அங்கிருந்து வந்த பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிசெய்தனர்.  இதை நேற்று அரியலூர் மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர்.

 

அவரை தனிமைப்படுத்தும் வார்டில் தங்க வைத்து தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பெண்கள் ஒரு ஆண்.

 

தனிமையில் சிகிச்சையில் இருந்த அந்த இளம்பெண் தனது செல்போனில் டிக்டாக் எடுத்து ஜாலியாக அதை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.  இதை கவனித்த மேற்படி மூன்று ஊழியர்களும் அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கி டிக் டாக் பார்த்துள்ளனர்.   இதை தற்செயலாக பார்த்த மருத்துவர்கள் அந்த மூன்று பேர்களையும் கடுமையாக எச்சரித்ததோடு கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் பயன்படுத்தியதால் மேற்படி மூவரையும் தனிமை படுத்தி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இவர்களுக்கும் கொரான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மருத்துவ பணியாளர்கள் கொரோனா பாதித்த நபர்களிடம் மிகவும் எச்சரிக்கை யாகப் பழகவேண்டும்.  மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் கூட,  அதை அலட்சியம் செய்து விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். மேற்படி மூவரின் செயல் அவர்களுக்கு  விபரீதமாக மாறும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.  எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் அரியலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கெட்டவர்களை மட்டும் காயப்படுத்துவேன்' - கொலை செய்துவிட்டு பதிவு போட்ட டிக்டாக் பிரபலம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக்  பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

 

பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மீசை வினித் மீண்டும் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Mustache vinith again arrested

 

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர் ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து மிரட்டி 2.5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.