
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அந்த பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்குவதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து வேலூர் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அது யார் என விசாரித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவண பாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.