Skip to main content

பாம்பை கடித்து துப்பிய இளைஞர்கள் கைது!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Three youths arrested for biting snake and spitting it out ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அந்த பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்குவதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து வேலூர் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அது யார் என விசாரித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவண பாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தோழிகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; வீட்டில் நடந்த துயரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Bride lost their life after cancelling wedding because her friends dont like groom

 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வசித்து வரும் சீனிவாசனின் மகள் சபீனா(20). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சபீனாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. நெமிலி அருகே வசிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் சபீனாவிற்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருவருக்கும் கடந்த 29 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

 

இந்த நிலையில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை எனது தோழிகளுக்கு பிடிக்கவில்லை; அதனால் எனக்கும் பிடிக்கவில்லை என்று கூறி வீட்டி இருந்து வெளியேறி பாதுகாப்பு கேட்டு அரக்கோணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் சபீனாவை காப்பகத்தில் சேர்ந்தனர். இதையடுத்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சபீனாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்த நிலையில், காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சபீனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சபீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

snake entered the district collector office premises

 

ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 4 மாடி அடுக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சுற்றி செடி, கொடிகள் நிறைந்து காணப்படுவதால் சில நேரங்களில் விஷ உயிரினங்கள் வருவதால் ஆட்சியர் அலுவலகத்தில் வரக்கூடிய பொதுமக்கள் பீதி அடைகின்றனர்.

 

இந்நிலையில் சென்னையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சொகுசு கார் ஒன்று அங்கு நின்றது. அதிலிருந்து நல்ல பாம்பு வெளியேறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து பாம்பை அப்புறப்படுத்த முயன்றபோது பாம்பு படமெடுத்து போக்கு காட்டியதால் அங்கிருந்த இளைஞர்கள் கூட அஞ்சினர். 

 

அப்போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. உடனடியாகத் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தைப் படுக்க வைத்து ஜெயின் ப்ராக்கெட்டில் புகுந்திருந்த நல்ல பாம்பை ஃபேர்பாக்ஸால் கழற்றி லாவகமாக பாம்பை பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பை அம்மூர் வனப்பகுதியில் விட்டனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்