Skip to main content

பாம்பினால் விபத்துக்குள்ளான மூன்று வாகனங்கள்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Three vehicles get accident while in a snake crossed

 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பேரங்கியூர் பஸ் நிருத்தம் அருகில்  ஒரு பாம்பு விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெரிச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் சென்னையில் இருந்து தனது லாரியில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரி  பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்று கொண்டிருந்தது.

 

அதை பார்த்து லாரி டிரைவர் சுப்பிரமணியன் அந்த பாம்பின் மீது லாரி ஏறாமல் இருப்பதற்காக சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து லாரியில் இருந்த இரும்பு பொருட்கள் சாலையில் விழுந்து சிதறின. லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று இரும்பு பொருட்கள் மீது எரியுது. இதனால் பஸ் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சென்டர் மீடியனில் குறுக்கே கடந்து அந்தப்பக்கம் எதிர் வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது உரசி சோலார் மின்சார கம்பத்தில் மோதி நின்றது.

 

Three vehicles get accident while in a snake crossed

 

இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் ராமராஜ், கண்டக்டர் நீதி வழி பாண்டியன் ஆட்டோ டிரைவர் அறிவரசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு பாம்பு குறுக்கே வந்து இப்படிப்பட்ட ஒரு பெரும் விபத்தை ஏற்படுத்தி மூவரை காயப்படுத்தியுள்ளது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாம்பினால் ஏற்பட்ட விபத்து மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.