Skip to main content

சத்துணவுப் பெண் ஊழியரின் கொலை வழக்கு; மூவருக்கு 'ஆயுள்'!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Three person jailed for life in case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம், வயது 58. இவர் மூரார்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக தனபாக்கியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வந்துள்ளார்.

 

அதில், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தனபாக்கியம் குடும்பத்தினர் மீது அர்ஜுனன் குடும்பத்திற்கும், மேலும் முன்விரோதம் அதிகரித்தது. இதனால் அர்ஜுனன் குடும்பத்தினர் தனபாக்கியத்தைக் கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தனபாக்கியம் தனது சத்துணவுப் பணியை முடித்துக் கொண்டு மூரார்பாளையத்தில் இருந்து தனது ஊருக்கு நடந்துவந்து கொண்டிருந்தார்.

 

அப்போது அர்ஜுனன் அவரது பிள்ளைகள் முத்துகிருஷ்ணன், லட்சுமி குமார் ஆகிய மூவரும் சேர்ந்து தனபாக்கியத்தை வழிமறித்துச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி அவர்கள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்.

 

அந்த தீர்ப்பில், தனபாக்கியத்தை கொலைசெய்தது சம்பந்தமாக அர்ஜுனன், முத்துகிருஷ்ணன் மற்றும் லட்சுமி குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதம் கூடுதல் சிறைத் தண்டனையும் சேர்த்து விதிக்க வேண்டும் என்று தீர்ப்பினை வழங்கி உள்ளார். சிறைத் தண்டனை கிடைக்கப் பெற்ற அப்பா பிள்ளைகள் மூன்று பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டுசென்று அடைத்தனர். இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில்குமார் ஆஜராகி சிறப்பாக வாதாடியுள்ளார். சத்துணவு ஊழியர் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.