Skip to main content

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திராவைச் சேர்ந்த மூவர் கைது!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Three arrested from Andhra Pradesh

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலை பகுதியைச் சேர்ந்த கனரக வாகன விற்பனையாளராக செயல்பட்டு வந்த ராஜகோபால் என்பவரது மகன் சேகர். இவர் திண்டிவனம் அருகில் உள்ள பெருமுக்கல் பகுதியில் இருந்த ஒரு கனரக வாகனம் ஒன்றை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். கடந்த அக் 4ஆம் தேதி அதற்கு தேவையான பணத்தை திண்டிவனத்தில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் இருந்து 4 லட்ச ரூபாயும் நண்பர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாயும் சுமார் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி கொண்டு புறப்பட்டுள்ளார்.

 

அப்படி செல்லும்போது சேடன் குட்டை பகுதியில் சாலை ஓரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனத்தில் இந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த சேகர் உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீஸ் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

 

நேற்று முன்தினம் பெருமாள் கோவில் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் 3 பேரும் தெலுங்கில் பேசி உள்ளனர். இதையடுத்து நன்கு தெலுங்கு பேச நபரை தேடிப்பிடித்து அழைத்து வந்து மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூவரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயது ராஜு, 44 வயது சர்க்கரையா, 39 வயது ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூவரும் சேகரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் மூவரும் மேல்மலையனூர், செஞ்சி, விழுப்புரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து ஒரு கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.