Skip to main content

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான நோ்காணல் நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான பொறியியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், கலை, அறிவியல் பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் என 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

 

Thousands of graduates applying for cleaning work!


கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுத் தொழிலாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான நோ்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரா்களுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இப்பணிக்கு, 21 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படைத் தகுதிகள் குறித்து விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தோ்வு செய்யப்படும் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும் மாநகராட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று  நோ்காணலில் 2 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள், பொறியியல், டிப்ளமோ படித்தவா்கள் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனா். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

நேர்காணல் முடித்த பின் செய்தியாளரிடம் பேசிய பட்டயபடிப்பு முடித்த பட்டதாரி மாணவிகள்;-

 

Thousands of graduates applying for cleaning work!

 

படித்ததற்கான வேலைகள் கிடைக்கவில்லை என்பதால் கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார்.இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேர்காணலுக்கு வந்தவர்களில்  50 சதவீததிற்கும் மேற்பட்டோர்   எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், பொறியில் படிப்பு முடித்தவர்கள்  என ஏராளமானவர்கள்  நேர்காணலில்  பங்கேற்றனர். துப்புரவு பணி வேலை ஒன்றும்  இழிவானதல்ல எனவும்    குடும்ப சூழ்நிலை காரணமாக எந்த வேலை கிடைத்தாலும் போதும் என்ற நிலை இருப்பதாகவும், தற்போது யாருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் பட்டதாரி பெண்கள், தற்போது ஜெராக்ஸ் கடையில் 8000 சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையில் துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தால் இன்னும் அதிகம் ஊதியம் கிடைக்கும் என்பதால்  இந்த பணிக்கு விண்ணப்பித்து  இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் நாளை வரை நடைபெறுகின்றது. துப்புரவு பணியாளர் பணி இழிவானதல்ல என்ற எண்ணம் இளைய சமுதாயத்திடம்  ஏற்பட்டுள்ளதே  இந்த பணிக்கு பட்டதாரிகள் அதிகம் விண்ணப்பித்துள்ளதற்கு  காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.