Skip to main content

வட்டிக்கடன் தொல்லை... 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து வியாபாரி தற்கொலை முயற்சி! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

மைக்ரோ வட்டிக்கடன் தொல்லையால் கடன் பாரம் தாங்காமல் தென்காசி மாவட்டம் கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வாரம் ஆட்டோ டிரைவர் கந்தசாமி, தன் மனைவி இந்துமதி மகன் சின்னமுத்திரன் இவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டுத தானும் தற்கொலை செய்து கொண்டது மாநிலத்தையே பரபரப்பாக்கிய சூடு அடங்குவதற்குள்.
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரும்பு வியாபாரி ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது மூன்று பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சாத்தான்குளத்தின் பிரண்டர் குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (33 வயது) இவரது மனைவி சிவசக்தி இவர்களுக்குப் பிரியதர்ஷினி (4 வயது) லாவண்யா (3 வயது) சக்திவேல் (2 வயது) மூன்று குழந்தைகள் உள்ளனர்.

thoothukudi district saththanakulam steel businessman incident police investigation


சென்னையில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்த வெற்றிவேல் வியாபாரத்திற்காக ஆங்காங்கே அதிக வட்டியில் கடன் வாங்கியிருக்கிறாராம். குடும்பச் செலவு, மற்றும் வியாபார மந்தம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட, கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். பாரம் தாங்காத வெற்றிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். தனது மனைவியிடம் அவளின் பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தகராறு மூண்டுள்ளதாம். கோபமான மனைவி தன் மகன் சக்திவேலை மட்டும் அழைத்துக் கொண்டு செம்மண்குடியிருப்பிலுள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
 

இதனால் மேலும் மனமுடைந்து மன அழுத்தம் அதிகமாகிப் போன வெற்றிவேல், நேற்று முன்தினம் (15.12.2019) மாலை தன் மகள்களான பிரியதர்ஷினி, லாவண்யா இருவருக்கும் விஷம் கலந்த உணவைக் கொடுத்து விட்டு தானும் சாப்பிட மூன்று பேர்களும் மயங்கியதுடன் உயிருக்குப் போராடியிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்கள் ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனைவி சிவசக்தியின் புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

வறுமை, கடன், தொல்லை மனபாரம் தாங்க மாட்டாத தற்கொலைச் சம்பவங்கள் முயற்சிகள், தீவிரமாகத் தடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.