Skip to main content

வாயில் மலம் திணித்து துன்புறுத்திய விவகாரம்;  குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும்-  மாவட்ட எஸ்.பி. துரை

Published on 08/05/2019 | Edited on 08/05/2019
k

 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருவண்டுதுறை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியல் சமுகத்தைச்சேர்ந்த கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழித்து, வாயில் மலம்திணித்து துன்புறுத்திய புகாரின் பேரில் இருவரை கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறை.   மேலும் ஒருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம்பாயும் என்றிருக்கிறார் மாவட்ட எஸ்,பி துரை.

 

k

 

இது குறித்து அவர்,   ‘’திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடந்த 28-04.19 அதிகாலையில் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான வயல்வெளி தொடர்பான பிரச்சனை காரணமாக கொல்லிமலை என்பவர் முத்து, ராஜ்குமார், ராஜேஷ் ஆகியோர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

 

k

 

புகாரை பெற்றுக் கொண்ட கோட்டூர் காவல் துறையினர் அன்றைய தினமே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, புகாரில் கொடுக்கப்பட்ட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் முத்து, ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை அன்றைய தினமே கைது செய்தனர். மேலும் ராஜ் குமாரை தேடி வருகின்றனர். 

 

k

 

இரு பிரிவினருக்கிடையே முன்பகை ஏற்கனவே இருந்து வருகிறது. மூன்றாவது குற்றவாளியான ராஜ்குமார் என்பவரை கைது செய்வதற்கு கோட்டூர் காவல் ஆய்வாளர் மற்றும்   திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். அதிலும் ராஜ்குமார் கல்லூரி மாணவன், சம்பவத்தின் போது அங்கிருந்தானா, கல்லூரியில் இருந்தானா என்பது குறித்து விசாரிக்கப்படும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும்," என்றார்.

 

k


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.