Skip to main content

ஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Thiruvaroor araneri lions club

 

திருவாரூர் அருகே கரோனா துவங்கிய நாளில் இருந்து பசித்தோருக்கு உணவளித்து மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தினர்.

 

கரோனா வைரஸால் வேலையின்றி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே அள்ளாடிவரும் நிலையில், ஆதரவற்றோர்களும், வயது முதிர்ந்த பெரியவர்களும் என்ன செய்வார்கள் என்கிற மனித நேயத்தில், "பசித்தோருக்கு உணவளிப்போம்" என்கிற முனைப்போடு கடந்த ஒரு மாதகாலமாக அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று உணவளித்து பசியாற்றிவருகிறது, திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம். திருவாரூரில் செயல்பட்டுவரும் அறநெறி லயன்ஸ் சங்கத்தினர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நற்பணிகளில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். 

 

ஒரு ஆண்டுக்கு முன்பு கிராமப்புற பள்ளி மாணவர்களை, நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலோடு நடிகர் சூர்யா உள்ளிட்ட சமுகத்தின் மீது அக்கறைக்கொண்ட நடிகர்கள், கல்வியாளர்கள் துணை கொண்டு நூலகங்கள் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிவார்ந்த மாணவர்களாக உருவாக்கினர். இது பலதரப்பட்டவர்களாலும் பாராட்டப்பட்டது.

 

அதன்பிறகு ரத்ததானம், உடல்தானம், கண்தானம் என செய்தபடியே இருந்தவர்கள், கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிக்கிடந்த ஏழ்மையானவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவுப் பொருட்களை வழங்கினர், இன்றளவும் வழங்கிவருகின்றனர்.

 

Thiruvaroor araneri lions club

 

இதற்கிடையில் பொதுமுடக்க நாட்களில் பணியில் இருந்துவந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் செய்ததோடு, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் முப்பது நாட்களுக்கு மேல் தர்பூசனி, பாயாசம், அவுள், பிஸ்கட், இளநீர், உணவு என தினசரி அவரவர்கள் பணியில் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்.

 

இதற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் உள்ளிட்டோர் அறநெறி லயன்ஸ் சங்க உறுப்பினர்களை அழைத்துப் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.

 

Thiruvaroor araneri lions club

 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆதரவற்று இருக்கும் முதியோர்களுக்கு தினசரி உணவு வழங்கி அவர்களின் பசியையும் போக்கிவருகின்றனர். இது குறித்து திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான ராஜ்குமாரிடம் கேட்டோம், "எங்கள் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் மக்களுக்கு சேவகம் செய்வதைப் பெருமையாகக் கருதுகிறோம், பொதுமுடக்கத்தால் மருத்துவ வசதியில்லாதவர்களுக்கு உதவி வருகிறோம், பசித்தோருக்கு உணவு வழங்குகிறோம், இதை எங்கள் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைவருமே பாகுபாடு இல்லாமல் செய்துவருகின்றனர். இது எங்களுக்குப் பெரும் மனநிறைவைக் கொடுக்கிறது," என்கிறார் உற்சாகமாக.

 

Thiruvaroor araneri lions club

 

எல்லோரிடமும் பணம் இருக்கும், ஆனால் அதை அடுத்தவர்களின் பசியைப் போக்க உதவுமா என்றால் மலை அளவிலான கேள்வியே நிற்கும். ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடி உதவும் அறநெறி லயன்ஸ் சங்கம் மேலும் வளரும் என்கிறார்கள் திருவாரூர் மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.