Skip to main content

இந்தியாவில் சினிமா எடுப்பது, நடிகனுக்கு கதை சொல்வது கடினம்- இயக்குநர் கோபிநயினார் பேச்சு.

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திரை இயக்கத்தின் சார்பில், 6- வது உலக திரைப்பட விழா, திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலம் என்கிற திரையரங்கில், அக்டோபர் 16- ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் விழாவில் 22 உலக திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.


இந்த நிகழ்வின் தொடக்க விழாவுக்கு அறம் பட இயக்குநர் கோபிநயினார், நடிகை ஷீலா போன்ற திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் தமிழ்செல்வன் உட்பட பலரும் வந்து கலந்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கோபிநயினார், சோவியத்தில் ஒரு திரைப்பட விழா நடந்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு விழாவாக இது இருக்க வேண்டும் என கற்பனை செய்துக்கொண்டு வந்தேன். இந்த நாட்டை ஒரு கம்யூனிஸ்ட் ஆள வேண்டும் என்பது என் விருப்பம். இந்த நாடு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் கம்யூனிஸ்ட்கள் ஆள வேண்டும். உலகத்தை ஆள கம்யூனிஸ்ட்களால் மட்டுமே முடியும். உலகத்தில் முதலாளித்துவம் கோட்பாடு, கம்யூனிஸ்ட் கோட்பாடு என இரண்டு கோட்பாடு உள்ளது. கம்யூனிஸ்ட் கோட்பாடு என்பது மக்கள் கோட்பாடு, மக்களின் வாழ்க்கைக்கான கோட்பாடாகும். ஆனால் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி சுரண்டி வருகிறது.

THIRUVANNAMALAI WOLRD FILM FESTIVAL GOPAI NANINAR SPEECH


இந்தியாவில் சினிமா எடுப்பது என்பது கடினம். தயாரிப்பாளருக்கு கூட கதை சொல்லிவிடலாம். ஆனால் ஒரு நடிகனுக்கு கதை சொல்றது, இங்க கஸ்டம். நம்மளை போல் ஒரு நடிகன் இருந்து விட்டால், அது நம்மோட பாக்கியம். ஆனால் அப்படி இங்கு கிடையாது. சினிமாவை அரசியலாக்க வேண்டும். அதை இடதுசாரி அரசியலாக்க வேண்டும். சினிமாவை அரசியலாக்கவில்லையெனில், அது முதலாளிகளின் சாத்தானாகிவிடும். அதை நம் மீது ஏவுவார்கள்.


ஒரு திரைப்பட பயிற்சி இன்ஸ்ட்டியூட்டில் பேச அழைத்தார்கள். அங்கு சென்று பேசினேன். அங்கு லட்சம் லட்சமாய் பணம் வாங்கிக்கொண்டு சினிமா பற்றி கற்று தருகிறார்கள். அங்குள்ள மாணவர்களிடம் வரலாறு குறித்து கேள்வி எழுப்பினேன். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. வரலாறே தெரியாமல் என்ன படம்மெடுத்து விட முடியும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.