Skip to main content

கல்யாணத்துக்கு பொண்ணு தரமாட்டேன்கிறாங்க - கிராமசபை கூட்டத்தில் ஆதங்கம்! 

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

Thiruvannamalai Paliyappat grama saba meeting

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்ட தகவல் தெரிந்து, ‘விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும்’ என பாலியப்பட்டு, புனல்காடு உட்பட சில கிராம மக்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றனர். 125வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

 

ஏப்ரல் 24ம் தேதி தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. பாலியப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள், “124 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறோம். ஒரு வி.ஏ.ஓ கூட வந்து பார்க்கவில்லை. பாலியப்பட்டு கிராமத்துக்கு சிப்காட் வருகிறது, விவசாய நிலங்களை எல்லாம் எடுக்கப்போகிறார்கள், வீடுகளை காலி செய்யச்சொல்கிறார்கள் என்கிற தகவல் பரவியதும் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு அக்கம்பக்க கிராமத்தினர் பெண் தரமறுக்கிறார்கள், நிச்சயம் வரை சென்ற திருமணம் நின்றுள்ளது. ஊரையே காலிபண்ணப்போறாங்க, இவுங்களுக்கு கடன் கொடுத்தால் எப்படி திருப்பி வாங்கறது என கடன் தரவும் மக்கள் யோசிக்கிறார்கள். நாம் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளோம், அதனால் கிராமசபை கூட்டத்தின் மூலமாக, மக்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம், இந்த பகுதியில் சிப்காட் தேவையில்லை என தீர்மானம் இயற்றுங்கள், ஏற்கனவே ஒரு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது, மீண்டும் இப்போதும் தீர்மானம் இயற்ற வேண்டும்” என மக்கள் சார்பாக சம்பத் என்பவர் கோரிக்கை விடுத்தார்.

 

கிராமசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் உடலுக்குள் காளிம்மாள் என்கிற சுவாமி புகுந்ததாகச்சொல்லி திடீரென சாமியாடினார். எனக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்ங்க. நான் சிப்காட் வராமல் தடுக்குறேன் என்றார். பின்னர் அவருக்கு திருநீறு போட்டு அவரை சாந்தப்படுத்தினர்.

 

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசாங்கம் எடுக்கவுள்ளது என்கிற தகவலால் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயம் செய்யும் இளைஞருக்கு, திருமணத்துக்கு பெண் தரமறுக்கிறார்கள், கடன் தரமறுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.