Skip to main content

தி.மலையில் அமெரிக்க மூதாட்டியை வன்கொடுமை செய்த 4 பேர்... போலீஸ் தீவிர விசாரணை!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

Thiruvannamalai american issue


திருவண்ணாமலை ரமண ஆசிரமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போதும் பல வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். அதோடு, தனியார் விடுதிகளிலும் தங்கியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயதான பெண்மணி, 'கெஸ்ட் ஹவுஸ்' என்கிற விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.


இந்தப் பெண்மணியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டிசம்பர் 4ஆம் தேதி இரவு அனுமதித்துள்ளனர். மயக்கத்தில் இருந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து காவல்துறைக்குத் தகவல் கூறியுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண் போதைப் பொருள் உட்கொண்டுள்ளார். அவர் போதையில் இருந்தபோது 4 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது. அவர்கள் யார் என விசாரணை நடத்திவருகிறோம். அவர் கண் விழித்தால்தான் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள்.

 

போதைப் பொருட்கள் புழக்கம் திருவண்ணாமலை நகரில் அதிகமாகியுள்ளது. திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர் சிலரும் அதனைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அவர்கள் உள்ளுர் போதைப் பொருள் விற்பனை நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு போதைப் பொருட்களை வாங்குவதாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து போதைப் பொருள் எடுத்துக்கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.

 

அப்படி, இருக்கும்போது பாலியல் பிரச்சனைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை நகரில் தங்கியுள்ள வெளிநாட்டினரிடம் கடந்த சில வருடங்களில், போதைக்கு அடிமையான உள்ளூர் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

'ஆன்மீக நகரமா? கஞ்சா நகரமா?'- நெரிசலில் ஊடுருவும் போதை வஸ்துக்கள்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 'Spiritual City? Ganja City?'- Narcotics seeping into the traffic

திருவண்ணாமலை நகரத்தில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது, பள்ளி மாணவர்களுக்கே சுலமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறை தடுப்பதில் எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகர மன்ற கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள் எங்கள் பகுதிகளில் கஞ்சா விற்கிறார்கள் என குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப் பாதையில் உள்ள சாமியார்களிடமும் கஞ்சா பழக்கம் அதீதமாக உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்தார்கள் என சமுத்திரம் காலணி பிரவீன்குமார், விக்னேஷ், காட்டு மலையனூர் சந்துரு ஆகிய மூவரை கைது செய்துள்ளது திருவண்ணாமலை நகரக் காவல் துறை. அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். 

இவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள இவர்களை விட பெரிய பெரிய கேங்க் எல்லாம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி காவல்துறை, பாண்டிச்சேரிக்கு திருவண்ணாமலையிலிருந்தே கஞ்சா வருகிறது என குற்றம் சாட்டியது.திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து  கஞ்சா வருகிறது. இங்கிருந்து பல இடங்களுக்கு செல்வதாக அப்போதே பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையாரை கோவிலை தரிசிப்பதற்காக கிரிவலம் வருவதற்காக ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்த கூட்டத்தோடு கஞ்சா கடத்தல் கும்பல்களும் சேர்ந்து வந்து விடுகின்றன. அன்றைய தினம் காவல்துறையின் வாகன சோதனை எதுவும் இருக்காது என்பதால் கஞ்சாவைக் கொண்டு வந்து இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள் என்கிறார்கள்.

ஆன்மீக நகரம் என்பது வருங்காலத்தில் கஞ்சா நகரம் என பெயர் மாற்றம் அடைவதற்கு முன்பு காவல்துறை கஞ்சா கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.