Skip to main content

5 நிமிடத்தில் 150 திருக்குறள்- சாதித்த 8 வயது மாணவிக்கு வீடு பரிசளித்த கலெக்டர்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவேரிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார் 8 வயதான மாணவி தர்ஷினி. இவரது பெற்றோர் ஆணைக்குட்டி – சத்யா. இருவரும் விவசாய கூலி பணியாளராக உள்ளனர். தர்ஷினி, கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பில் தர்ஷினியின் தங்கையும், யு.கே.ஜி. படிக்கும் ஒரு தம்பியும் உள்ளனர். இவர்களது குடும்பம் தற்போது தாத்தா வீட்டில் வசித்து வருகிறது. ஏழ்மையான நிலையில் வசித்து வந்தாலும் தர்ஷினி படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்ந்துள்ளார்.

 

c


கல்லாங்குத்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் திருக்குறள் வாசித்து, ஒப்பிப்பதை ஊக்குவித்து வந்துள்ளார்கள். மாணவி தர்ஷினி ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் 5 நிமிடங்களில் 27 திருக்குறள் ஒப்பித்துள்ளார். இதனை பார்த்த ஆசிரியர்கள் தர்ஷினிக்கு கூடுதல் பயிற்சி அளித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தர்ஷினி 2 ஆம் வகுப்பு படிக்கும் போது 4 நிமிடங்களில் 110 திருக்குறள் ஒப்பித்து சாதனை புரிந்துள்ளார். மேலும், மாணவி தர்ஷினிக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தும், அவரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள். அந்த பயிற்சியின் மூலம் 5 நிமிடங்களில் 150 திருக்குறள் ஒப்பிக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்தார்.


இதனை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் இயங்கி வரும் டிரம்ப் வேல்டு ரெக்கார்ட் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்கள். மாணவி தர்ஷினியின் சாதனையை மேற்கண்ட உலக சாதனை நிறுவனம் அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஜீலை 18ந்தேதி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தலைமையில் மாணவி தர்ஷினியின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதனை அங்கீகரிக்க டிரம்ப் உலக சாதனை நிறுவனத்தின் பிரநிதிகள் வருகை தந்துயிருந்தனர். அனைவர் முன்பும் திருக்குறள்களை சொல்லத்துவங்கினார் மாணவி தர்ஷினி. 289 விநாடிகளில் (4.49 நிமிடங்கள்) 150 திருக்குறளை ஒப்பித்து உலக சாதனை புரிந்தார்.


இந்த சாதனையை அங்கீகரித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவி தர்ஷினியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவி தர்ஷினிக்கு பதக்கம், கேடயம் மற்றும் தங்கச் சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி தர்ஷினி திருக்குறள் ஒப்பிக்கும் போது மிகத் தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தார்.

 

c


மாவட்ட ஆட்சியர்  மாணவி தர்ஷினியின் குடும்பத்தினர் பற்றி விசாரித்தபோது, சொந்த வீடு இல்லாமல் தனது தந்தை வழி தாத்தா வீட்டில் கூட்டுக் குடும்பமாக நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதை அறிந்தார். உடனடியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா மூலமாக மாணவி தர்ஷினி குடும்பத்திற்கு வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவேரிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தன் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


8 வயது சிறுமி தனது திறமையால் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, அந்த சாதனை மூலமாக தாங்கள் வாழ மாவட்ட ஆட்சியர் மூலமாக இலவச வீட்டை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.