Skip to main content

மனமுடைந்த ஒரு தந்தையின் ட்விட்டர் பதிவும், தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையும்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Thiruvallur district A Father of Mental illness boy has been caught by police

 

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் முதலில் காலை 12 மணி வரை திறக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சென்னை காவல் ஆணையர் ஊரடங்கில் இருக்கும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் அதிக அளவில் வெளியே சுற்றி திரிவதால் ஊரடங்கின் பயன் அடைய முடியாத நிலை ஏற்படுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. 

 

இதனால், ஊரடங்கில் இன்னும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து ஊரடங்கை கடுமையாக்கியுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (15ஆம் தேதி) முதல், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை உள்ளிட்டவை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் சென்னை உட்பட தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், நேற்று காலை திருவள்ளூர் மாவட்டத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றவரை காவல்துறையினர் மடக்கி அவரிடம் ஊரடங்கு விதியை மீறியதாக அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர். இதனால், மனமுடைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசை குறிப்பிட்டு, எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளில் குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்” என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

 

 

இது தமிழக முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் அவரை தொடர்புகொண்டு நடந்தவற்றை விசாரித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரத்திற்குள் அவரின் வீடு தேடி வந்து மருந்தையும் தாங்கள் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டு சென்றனர். 

 

முதல்வரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இன்று காலை காவல்துறை மீது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். என் குறைகளை கேட்டறிந்தது பேராறுதலாக இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேரன்போடு என்னை அணுகினர். நான்குமணி நேரத்தில் என் மகனின் மருந்தையும் பணத்தையும் வீடு தேடிவந்து கொடுத்துதவிய காவல்துறைக்கும் அரசுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு வகையில் நாகரிக அரசியல் நடந்துவருவதாக அரசியல் விமர்சகர்களும் மக்களும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் மீண்டும் திமுக ஆட்சி பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.